நமக்கு சாதா ஆப்புன்னா, ஆஸ்திரேலியாவுக்கு ஸ்பெஷல் மசாலா ஆப்பு கிடைச்சிருக்கு. ரெண்டு இறுதிப் போட்டிலயும் தோத்து இங்கிலந்து கிட்ட கோப்பையை தூக்கி குடுத்திருக்கு. கிரிக்கெட்னா வெற்றி தோல்வி சகஜம் தான். இது ஒன்னும் பெரிய விஷயமில்லைங்கறவங்க போன வாரம் ஆஸ்திரேலிய அணியோட பயிற்சியாளர் சொன்னதை படிங்க..
"உலகக்கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியா ஆடும் இத்தொடர் அணியின் வீரர்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிரணியினர் நாங்கள் எதிர்பார்த்தபடி எங்களுக்கு ஈடு கொடுத்து ஆடவில்லை. எதிரணியினரின் பலவீனமான பேட்டிங்கினால் எங்கள் பந்து வீச்சாளர்கள், தங்களது யார்க்கர்,பவுன்சர் போன்ற திறமைகளை சோதித்துப் பார்க்க முடியவில்லை. எங்கள் பந்து வீச்சாளர்களின் திறமையை வளர்க்கும் விதம் அவர்கள் விளையாடவில்லை. அதே காரணத்தால் எங்கள் அணியினரின் ஃபீல்டிங் திறமையையும் சோதிக்க முடியவில்லை".
கடைசி ரெண்டு இறுதிப்போட்டிலயும் அடி வாங்கினிங்களே, அப்ப எல்லாத்தையும் சோதிச்சு பார்த்திருக்கலாமேங்க?? மறந்துட்டிங்களோ?
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே
போன கதை உனக்கு தெரியுமா??
Monday, February 12, 2007
ஆஸ்திரேலியாவின் பூமராங்
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 7:31 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
நீங்க முதல்ல இலங்கைய ஜெயிக்க முடியுமானு பாருங்கடா :(
Post a Comment