Friday, March 30, 2007

சென்றார்கள்.. வந்தார்கள்..



இதுக்கெல்லாம் விளக்கம் குடுக்கனுமாங்க..படத்தை பாருங்க உங்களுக்கே புரியும்..

எதுக்குப்பா இவ்ளோ 'கன்'னு???? காப்பாத்தவா? சுட்டு தள்ளவா?




Pirates of the Carribean



Mission Impossible :(



Final Destination??



Gone in 60 Seconds!!


The Inside Man?



GodFather?





இப்படி ஆரம்பிச்சு!!!




இப்படி முடிஞ்சிடுச்சு...





திராவிட் என்ன சொல்றாருன்னா...





அடுத்த வேலைக்கு தயாரான அகர்கர்... (ஏண்டா என்னை வம்புக்கு இழுக்கலைன்னா உனக்கு தூக்கம் வராதா? )


இந்தியா முதல் சுற்றுலயே தோத்து வெளிய போனதால நடந்த நன்மைகள்..

Thursday, March 29, 2007

சற்றுமுன் : இந்திய அணியின் புதிய பயிற்சியாளார் அறிவிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளர் சேப்பலுக்கு பதில் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக சரத் பவார் தெரிவித்துள்ளார். இவர் முந்தைய பயிற்சியாளரை விட மிகவும் இளமை(?)யானவர் மற்றும் திறமை(?)யானவர் என அவர் தெரிவித்தார். இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.







சற்றுமுன் நிருபர் சிவபாலனுக்கு இவர் அளித்த பே(ட்)டி..

சிவபாலன்: "வாழ்த்துக்கள் திரு மந்திரா பேடி அவர்களே. "

ம. பேடி : "நன்றி. நான் ரொம்பவும் சந்தோஷமா இருக்கேன். இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கும்னு கனவுலயும் நினைக்கலை"

சிவபாலன் : "இப்ப என்ன பண்ணலாம்னு இருக்கிங்க ? "


ம. பேடி : " சரியா உக்காரலாம்னு இருக்கேன். இந்த சேர்ல ஒரு கால் ஆடிகிட்டே இருக்கு. கொஞ்சம் பேலன்ஸ் பண்ணி உக்காந்துக்கறேன் வெயிட் பண்ணுங்க "


சிவபாலன் : "மேடம் நான் கேட்டது இந்திய அணி நல்லா விளையாட என்ன பண்ணலாம்னு இருக்கீங்கன்னு? "

ம. பேடி : "ஓ அதுவா, அதை முதல்ல நான் கிரிக்கெட்னா என்னனு கத்துகிட்டதுக்கு அப்புறமா முடிவு பண்ணணும்"

சிவபாலன் : "என்னது கிரிக்கெட் கத்துக்கனுமா? அப்புறம் எப்படி உங்களை பயிற்சியாளர் ஆக்கனாங்க? "


ம. பேடி : "இதுல என்ன ஆச்சரியம்? கிரிக்கெட்டே தெரியாதவங்க நம்ம டீம்ல இருக்கும்பொழுது, நான் பயிற்சியாளர் ஆகக்கூடாதா?. நம்ம ஊருல கோச் ஆகறதுக்கோ, டீம்ல விளையாடறதுக்கோ கிரிக்கெட் தெரியனும்னெல்லாம் அவசியமில்லை. வேற வழி நிறைய இருக்கு"

சிவபாலன் : "உங்களுக்கு முன்னால கோச்சா இருந்த சேப்பலை பத்தி என்ன நினைக்கிறிங்க? "


ம. பேடி : "அவர் எங்கே கோச் பண்ணாரு. சும்மா சும்மா கோச்சுகிட்டு தான் போனாரு. ஏடாகூடமா மெயில், எஸ்.எம்.எஸ் அனுப்பவே அவருக்கு நேரம் சரியா இருக்கு"


சிவபாலன் : "வெளிநாடுகள்ள ஆடுறப்ப நம்ம வீரர்கள் சொதப்புறதை பத்தி? "


ம. பேடி : "அதுக்கு நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன்.எல்லா ப்ளேயர்ஸையும் வெளிநாடுகளுக்கு கூட்டிட்டு போய் புக் கிரிக்கெட் ஆடப்போறோம். அதுல நிறைய ரன் எடுத்தவுடனே எல்லாருக்கும் கான்ஃபிடன்ஸ் வந்துடும். அதுக்காக நிறைய புக்ஸ் ஆர்டர் பண்ணியிருக்கோம்."


சிவபாலன் : "நம்ம அணி மனதளவில ஸ்டாரங்கா இல்லன்னு சொல்றதை பத்தி..."


ம. பேடி : "உண்மைதான். நம்ம அணி மெண்டலி வீக் தான். அதுக்காக நிமஹன்ஸ்ல இருந்தும், கீழ்பாக்கத்துல இருந்தும் நாலு பேரை டீம்ல சேர்த்து மெண்டலி ஸ்ட்ராங்கா ஆக்கப்போறோம்" .


சிவபாலன் : "வேற எதாவது அதிரடி திட்டம்??"

ம. பேடி : "இருக்கே. மக்கள் கிரிக்கெட் பார்க்காம என்னையே டி.வில பார்க்கறாங்கன்னா அதுக்கு காரணம் க்ளாமர். அதனால இனிமே நம்ம டீமும் மேட்சுல ஆடும்போது சட்டையில்லாம சல்மான்கான் மாதிரி ஆடப்போறாங்க. அந்த க்ளாமர்ல எதிரணி தடுமாறும்போது நம்ம பசங்க அடிச்சு ஜெயிச்சுடுவாங்க :) " .


சிவபாலன் : "சட்டை போடலைன்னா ஸ்பான்சர்ஸ் லோகோ எல்லாம் எப்படி தெரியும்? " .


ம. பேடி : "எல்லா லோகோவையும் உடம்புல ப்ளூ குத்திடுவோம்" .

சிவபாலன் : "என்னது ப்ளு குத்துவீங்களா?"

ம. பேடி : "ஆமாம் நம்ம டீம் கலர் ப்ளூ தான. அதான் பச்சை குத்தறதுக்கு பதிலா ப்ளூ குத்துறோம்"

சிவபாலன் : "அடுத்த உலகக்கோப்பைலயாவது இந்தியா ரெண்டாவது சுற்றுக்கு போகுமா? "

ம. பேடி : "கண்டிப்பா போகும். நேத்து நைட் ஐசிசியோட தலைவர் மால்கம் ஸ்பீடோட டின்னர் சாப்பிட்டேன். அப்போ அடுத்த தடவை இந்தியாவையும், பெர்முடாவையும் மட்டும் ஒரு க்ரூப்ல போட்டு, அந்த க்ரூப்ல முதல் ரெண்டு இடத்தை பிடிக்கற அணிகள் அடுத்த சுற்றுக்கு போற மாதிரி பண்ணனும்னு கேட்டேன். அவரும் சரின்னு சொல்லிட்டாரு. அதனால் அடுத்த தடவை முதல் சுற்றுல இந்தியா பெர்முடா கிட்ட தோத்தாலும் அடுத்த சுற்றுக்கு போயிடும்" .

சிவபாலன் : "சோர்ந்து போயிருக்கற நம்ம வீரர்களுக்கு எதாவது ஊக்கத்திட்டம் வச்சிருக்கிங்களா?"

ம. பேடி : "ஆமாங்க, இனிமே அடிக்கிற ஒவ்வோரு 25 ரன்னுக்கும் இல்லைன்னா எடுக்கற ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஒரு கிஸ் தருவேன்னு சொல்லியிருக்கேன்"

சிவபாலன் : "இவ்வளவு நேரம் எங்களுக்காக செலவு பண்னதுக்கு ரொம்ப நன்றிங்க. ஆமா ரொம்ப நேரமா பக்கத்து ரூம்ல எதோ டி.வி சத்தமா கேடுகிட்டு இருக்கே? "

ம. பேடி : "ஆமா நம்ம சச்சின் தான் உக்காந்து இங்கிலீஷ் படம் பார்த்துகிட்டு இருக்காரு"

சிவபாலன் : "என்ன படம்?"

ம. பேடி : "GONE IN 60 SECONDS !"

Wednesday, March 28, 2007

எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம் ?

இந்த பதிவுல வர எல்லாருமே கோடிகோடியா சம்பாதிச்சுட்டாங்க. அதனால் இந்த பதிவுல சொல்றது எல்லாம் கற்பனையே..நம்ம சிறில் கவி தந்த விதை எழுதற மாதிரி இது மெயில் தந்த விதை. மெயில்ல வந்த விஷயத்துக்கு கற்பனைய கலந்து எழுதியிருக்கேன்.

ஏப்ரல் ஆறாம் தேதி பிசிசிஐ குழு இந்திய அணியோட தோல்விக்கான காரணங்களை விவாதிக்க போறாங்களாம். அப்போ பெரிய தலைங்க சிலது உருளும்னு பேசிக்கறாங்க. ரொம்ப நாளாவே மேட்ச்ல ஆடறதை பொறுத்து தான் சம்பளம் கொடுக்கனும்னு ஒரு பேச்சு இருக்குது. ஒருவேளை அதை கட்டாயமாக்கினா என்னவெல்லாம் நடக்கலாம்னு ஒரு சின்ன கற்பனை.




இடம் : அகர்கர் வீடு

அகர்கர் மேட்சுல விளையாட (இன்னுமாடா நீ டீம்ல இருக்க ? ) புறப்பட்டுகிட்டு இருக்கார்..

அகர்கர் அம்மா : " தம்பி, இந்த தடவையாவது கொஞ்சம் உருப்படியா பந்து போட்டு ரெண்டு விக்கெட் எடுக்க பாருப்பா. நீ விக்கெட் எடுத்து சம்பாதிக்கர காசுல தான் உன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும் :( ".

அகர்கர் : "நான் என்னம்மா பண்றது. எந்த பால் போட்டாலும் லெக் சைட்லயே போகுது. கஷ்டப்பட்டு ஆஃப் சைட்ல போட்டா அந்த பாழப்போன எதிர்டீம்காரங்க அடிச்சிடறாங்க"

அ. அம்மா : "அப்பப்ப ஸ்லோ பால் மாதிரி எதாவது போடேம்பா? "

அகர்கர் : "அந்த கூத்தை ஏம்மா கேக்கறீங்க. போன தடவை இப்படிதான் ஸ்லோபால் போடறேன்னு ரொம்ப ஸ்லோவா போட்டுட்டேன். பந்துக்கு முன்னால நான் பேட்ஸ்மேன் கிட்ட போயிட்டேன். அவன் என் சட்டைய பிடிச்சு என்னடா நீ மட்டும் வர? பந்து எங்கேடான்னு கேக்கறான். "

அ. அம்மா : "என்னவோப்பா.உன்னை நம்பி தான் இந்த குடும்பம் இருக்குங்கறதை மறந்துடாத "


இடம் : ஷேவாக் வீடு

ஷேவாக்கின் மனைவியும் பால்காரரும்...

பால்காரர் : "ஏம்மா எத்தினி தபாம்மா வர்ரது. எப்போ தான் பாக்கிய குடுப்ப? '

ஷேவாக் மனைவி : "கோச்சுக்காதீங்க. கொஞ்சம் பொறுத்துக்கோங்க. அடுத்த மேட்சுல அவர் அம்பதோ நூறோ அடிச்ச உடனே குடுத்துடறேன். "

பால்காரர் : "இத்தையேதான் ரெண்டு வருசமா சொல்லிகினுகீற. போன மேட்சுல தான் பெர்முடா கிட்ட நூறு அடிச்சாரே, அந்த காசு என்னாச்சு? "

ஷே. மனைவி : " அந்த காசு மளிகைக்கடை பாக்கிக்கே சரியா போச்சுப்பா"

பால்காரர் : "இதப்பாரும்மா எனக்கு அதெல்லாம் தெரியாது. நாளைக்கு காசு வரலை வூட்ல இருக்க பாத்திரம் பண்டம் எல்லாம் தெருவுக்கு வந்துடும் "

ஷே. மனைவி : கண்ணிருடன் மனதுக்குள் "இந்த விடியா மூஞ்சிய கட்டிகிட்டு இப்படி கஷ்டப்பட வேண்டியதா இருக்கு. ஒரு பாண்டிங்கையோ, ஜெயசூரியாவையோ கட்டியிருந்தா இந்நேரம் ராணி மாதிரி இருந்திருக்கலாம்"



இடம் : மும்பை மைதானம்

ஜாகிரும் ஹர்பஜனும் பயிற்சி(?) முடிந்து பேசிகிட்டு இருக்காங்க..

ஹர்பஜன் : "ஆமா ஜாகிர், என்ன இப்பல்லாம் பயிற்சிக்கு தினமும் லேட்டா ஏழு மணிக்கு மேலயே வர?"

ஜாகிர் : "அதையேன் கேக்கற. கிர்க்கெட்ல வர வருமானம் வாய்க்கும் வயித்துக்குமே சரியாயிருக்கு. அதான் பார்ட்-டைமா காலைல பேப்பர் போட்டுகிட்டு இருக்கேன்"

ஹர்பஜன் : "அட நாதாரி, உன்கிட்ட எவ்வளவு நாளா என்னையும் எதாவது வேலைக்கு சேர்த்து விடுன்னு சொல்லிகிட்டு இருக்கேன். என்னையும் சேர்த்து விட்டிருக்கலாம்ல? "

ஜாகிர் : "நான் அவங்க கிட்ட கேட்டேனே. அதுக்கு அவங்க இதுக்கெல்லாம் வேகமா ஓடறவங்களால தான் முடியும், ஸ்பின்னர்சை எல்லாம் சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க"

ஹர்பஜன் : "வேகமா ஓடனுமா? ஏன் சைக்கிள்ல தான எல்லாரும் போவாங்க? "

ஜாகிர் : "அது கரெக்டு. உன்னாலயோ என்னாலயோ சைக்கிள் எல்லாம் வாங்க முடியுமா?"

ஹர்பஜன் : "சரி பரவாயில்லை. வேர எதாவது வேலை இருந்தா சொல்லு"

ஜாகிர் : "தமிழ்மணம்னு ஒரு சைட்ல செந்தழல் ரவிங்கறவர் டெய்லி ஏதோ வேலைவாய்ப்பு செய்திகள் போடறாராம். அதை வேனா பாரேன்? "

ஹர்பஜன் : "அதெல்லாம் மண்டைல எதாவது இருக்கறவங்களுக்குப்பா. நமக்கு வேலைக்காவாது"



இடம் : சச்சின் வீடு

சச்சினும் அவரது மகனும்...

சச்சின் : "ஏண்டா இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பலை?"

பையன் : "இல்லைப்பா ஸ்கூல் ஃபீஸ் கட்டாததால மிஸ் ஸ்கூலுக்கு வரவேணாம்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு மேட்சுலயாவது எதாவது அடிப்பியாப்பா?"

சச்சின் : "கவலைப்படாதடா, நாளைக்கு நல்லா ஆடி காசோட வீட்டுக்கு வரேன். எப்பவுமே நான் ஆடும்போது நீ உக்காந்து பாத்தா தான் எனக்கு ராசி. இப்பல்லாம் நீ உக்காந்து பார்க்கறதில்லையா?"

பையன் : "இல்லைப்பா மறக்காம உக்காந்து பார்க்கறேன். நீங்க ஆட வரும்போது எல்லாம் நீங்க நல்லா ஆடனுமேன்னு டென்ஷன்ல மூச்சா வந்துடுது. மூச்சா போக பாத்ரூம் போயிட்டு வரதுக்குள்ள நீங்க அவுட்டாயிடறீங்க :( "

சச்சின் : "சரி சரி, நாளைக்கு மூச்சா வந்தாலும் எந்திரிச்சு போகாம உக்காந்து பார்க்கனும். என்ன ?"

பையன் : "சரிப்பா."

இதுக்கு மேல இன்னைக்கு இவனுங்களை கலாய்ச்சா நல்லாயிருக்காதுன்னு நினைக்கிறேன். அதனால அடுத்த பதிவுல மற்றொரு கலாய்ப்பு. வேணாம் போதும் இத்தோட நிறுத்திக்கோனு [-X யாராவது மிரட்டினா கலாய்க்கறதை நிறுத்திடறேன். இப்போதைக்கு :-h :-h..

Tuesday, March 27, 2007

நாங்க ரொம்ப வியர்ட் -- இந்திய அணி


ஆளாளுக்கு அவங்களோட வியர்டான குணங்களை பத்தி எழுதறாங்க. எங்களைதான் யாருமே எழுத கூப்பிடலைனு ரொம்ப வருத்தப்படறாங்க இந்திய அணியினர். கூப்பிடலைன்னா என்ன நாங்க ரொம்பவே வியர்டுன்னு அவங்களோட வியர்ட் குணங்களை எனக்க்கு மெயில்ல அனுப்பியிருந்தாங்க. உங்களுக்காக அது..

ஏத்தி விடப்பா தூக்கி விடப்பா
பத்து மேட்ச் தொடர்ந்து டக் அடிச்சு ஃபார்மில இல்லாம தடுமாறுற பேட்ஸ்மேனையோ, விக்கெட்டே கெடைக்காம கவலைப்படர பவுலரையோ பார்த்தா எங்களுக்கு ரொம்ப பரிதாபமாயிடும். அதனால அவங்களுக்கு ரெண்டு செஞ்சுரியோ, 10 விக்கெட்டோ குடுத்து பெரிய நிலைமைக்கு கொண்டு வந்து விடுவோம். இந்த மாதிரி எங்களை நாயடி அடிச்சே பெரிய ஆள் ஆனவங்க நிறைய பேர் இருக்காங்க. அது என்னவோ தெரியலை, ஃபார்ம்ல இல்லாதவங்க எல்லாம் எங்க கிட்ட ஆடும்பொழுது ஃபார்முக்கு வந்துடறாங்க :)

தாய்மண்ணே வணக்கம்
எங்களுக்கு நம்ம தாய்மண்ணு ரொம்ப பிடிக்கும். அதனால தான் வெளில எங்க ஆடப்போனாலும் கீழே விழுந்து அந்த ஊரு மண்ணு எங்க உடம்பில ஒட்டிடாம பார்த்துக்கறோம். இது தெரியாத சில முட்டாளுங்க நாங்க கீழே விழுந்து புரண்டு ஃபீல்டிங்கே பண்றதில்லைனு சொல்றாங்க. அப்ப நம்ம ஊருல ஆடும்பொழுதும் ஏண்டா விழுந்து பிடிக்க மாட்டேங்கறீங்கனு நீங்க கேக்கறது தெரியுது. நம்ம ஊருல கீழே விழுந்து நம்ம பாரத மண்ணுக்கு அடிபட்டுட்டா..அதனால தான் :)

ஒற்றுமை
எங்களுக்குள்ள இருக்க ஒற்றுமை வேற யாருக்கும் வராதுங்க. ஒருத்தர் அவுட்டாயிட்டா மத்தவங்க எல்லாம் நிறைய அடிச்சு அவரை வருத்தப்பட வைக்க மாட்டோம். எல்லாரும் கடகடனு அவுட்டாயிட்டு வந்துடுவோம். டீம்ல ஒருத்தர் மனசு கஷ்டப்பட்டாலும் எங்களுக்கு தாங்காது. ஒருத்தன் அழும்போது மத்தவங்க சிரிக்க முடியுமா? அதனால் எப்பவும் எல்லாரும் ஒற்றுமையா ஒரே மாதிரி விளையாடுவோம்:). மேட்சுன்னா வெற்றி தோல்வி சகஜம் தான். அதுக்காக கூட ஆடுறவனை விட்டுக்குடுக்க முடியுமா?

வீட்டில புலி வெளியில எலி
எல்லாரும் எங்களை இந்தியால ஆடும்பொழுது மட்டும் தான் ஜெயிப்பீங்க. வெளில போய் ஆடுறப்ப உங்க பருப்பு வேகாதுங்கறாங்க. நீங்களே யோசிச்சு பாருங்க. நம்ம ஊருல நாங்க ஆடும்போடு நாங்க ஜெயிக்கனும்னு நீங்கல்லாம் எப்படி விரும்பறீங்களோ அதே மாதிரி தான் அந்த ஊரு மக்களும் அவங்க டீம் ஜெயிக்கனும்னு ஆசைப்படுவாங்க. அவங்க ஆசையை கெடுக்கலாமா? அப்படி கெடுத்ததுக்கப்புறம் அங்கேல்லாம் போய் சுத்திப்பார்க்க முடியுமா? அதனால தான் எந்த ஊருக்கு போய் ஆடுனாலும் தோத்துட்டு வரோம். இனியாவது எங்களை இப்படி சொல்லி கிண்டல் பண்றதை நிறுத்துங்க. இல்லைன்னா நாங்க எந்த நாட்டுக்கு போறோமா அந்த நாட்டோட பேரை இந்தியானு தற்காலிகமா மாத்தி வச்சிடுங்க. என்ன OKயா?


அச்சமில்லை அச்சமில்லை
எங்களுக்கு மேட்ச்ல தோக்கறதை பத்தி பயமே இல்லை. எப்படியும் எங்க ஊரு கேனைங்க எங்களை கைவிடாதுங்க. ஒரு மேட்ச் எதாவது சப்பை டீம் கிட்ட 100 அடிச்சிட்டா போதும் வாழ்க்கைல செட்டில் ஆயிடலாம். எங்களுக்கு பயமெல்லாம் எதிரணிய பார்த்து தான். பங்களாதேஷ்ல இருந்து ஆஸ்திரேலியா வரைக்கும் நாங்க பயப்படாத டீமே கிடையாது. அங்கே பவுலர் ஓடி வரும்போதே இங்கே எங்களுக்கு நடுங்க ஆரம்பிச்சுடும். என்னங்க பண்றது எங்க பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக் :). எல்லா டீமும் பெர்முடா மாதிரி ஆயிடுமா? அதனால நாங்க பயப்படாம விளையாட இனிமே பெர்முடவோட மட்டும் தான் ஆடரதுன்னு முடிவு பண்ணிட்டோம் :)

உங்களுக்கு தெரிஞ்ச வியர்டை நீங்களும் சொல்லிட்டு போங்க..


நாம இன்னும் இந்த அதிர்ச்சில இருந்து மீளாம இருக்கோம். இந்த வீனாப்போனதுங்க என்ன பண்ணுது பாருங்க..









கவலைப்படாட்டியும் பரவாயில்லை. கவலைப்படற மாதிரி நடிக்கவாவது செய்யலாம்ல?

Monday, March 26, 2007

அப்படி என்ன தாண்டா பேசுவீங்க?

லோக்கல்ல தென்னை மட்டை வச்சு ஆடறவங்களா இருந்தாலும், சர்வதேச லெவல்ல ஆடறவங்களா இருந்தாலும், ஒவ்வொரு ஓவர் முடிஞ்சதும், நடந்து வந்து பேட்டை தட்டிகிட்டு எதாவது பேசறது வழக்கம். இது சம்பந்தமா மெயில்ல வந்த ஒரு ஜோக்கையும், நடந்து முடிந்த இந்தியா-இலங்கை போட்டியையும் கலந்த ஒரு கற்பனை :)

இலங்கை 254 ரன் அடிச்சு இந்தியா 255 ரன் அடிச்சா வெற்றிங்கற நிலைமைல உத்தப்பாவும், கங்கூலியும் ஆட வர்றாங்க. முதல் ஓவர் சமிந்தா வாஸ் போடறாரு. உத்தப்பா தடவு தவுனு தடவி ரன் எதுவும் எடுக்காம ஆறு பந்தையும் ஆடி முடிச்சுடறாரு.

கங்கூலி : ஏண்டா, ஃபோரு சிக்ஸுனு அடீப்பனு பார்த்தா இப்படி தடவிட்டு வந்து சிரிக்கறேயே. உனக்கு உத்தப்பானு பேர் வச்சதுக்கு சொத்தப்பானு பேர் வச்சிருக்கலாம்.

உத்தப்பா : பேசாத நீயி.அவன் ஓடி வர்றது தான் தெரியுது. பந்து எங்கே விழுந்து எங்கே போகுதுன்னே தெரியலை.நானே சின்னதம்பி கவுண்டமணி மாதிரி ஒருவழியா தடவி அவுட்டாகாம நிக்கறேன். அடுத்து அந்த பஞ்சுமிட்டாய் தலையன் மலிங்கா போடுவான். நீ என்ன பண்ரனு பார்க்கலாம்.

கங்கூலி : இந்த பெங்காலிக்கு அந்த ரங்கோலி மண்டையன் எல்லாம் தூசுடா. பாரு இப்ப என் ஆட்டத்தை.

அடுத்த ஓவர் கங்கூலி வழக்கம் போல பந்துக்கு ஒத்தடம் குடுத்து ஆடிட்டு வரார்.
உத்தப்பா: (நக்கலான சிரிப்போட :) ) என்னமோ நாலு பால்ல ஆறு சிக்ஸ் அடிக்கபோற மாதிரி பேசுனே மாங்கா மண்டையா. ஏண்டா அடிக்கலை?
கங்கூலி : ஹி.ஹி அடிக்கலாம்னு தான் பார்த்தேன். எப்படியும் நீங்க எல்லாம் சீக்கிரம் அவுட்டாயி போகப்போறீங்க. நான் ஒரு 100 பால்ல 40 ரன் அடிச்சா அடுத்த கேப்டன் ஆயிடுவேன்ல. அதான். இது நமக்குள்ளயே இருக்கட்டும். நான் கேப்டன் ஆனா உன்னை வைஸ் கேப்டன் ஆக்கிடுறேன்.
உத்தப்பா : (மனசுக்குள்ள "போகாத ஊருக்கு வழி சொல்லுது பாரு பொறம்போக்கு. இது மறுபடியும் கேப்டனாயி நான் வைஸ் கேப்டன் ஆகறதுக்குள்ள எனக்கு சங்கூதிடுவாங்க" ). ஆகா நல்லா திட்டம் போடுறீங்க. கலக்கிடலாம்.

கொஞ்ச நேரத்துல உத்தப்பா உலக்கோப்பையில தனது அதிகபட்ச ஸ்கோரான 18 ரன்னை அடிச்சு அவுட்டாயி போறாரு. இப்போ ஷேவாக்கும் கங்கூலியும் ஆடறாங்க.

கங்கூலி : என்ன ஷேவாக், இன்னைக்கு எவ்வளவு அடிக்கறதா உத்தேசம்?
ஷேவாக்: நிச்சயமா இன்னைக்கும் செஞ்சுரி அடிச்சிடாலம்னு தோனுது.
கங்கூலி : இவனுங்களை என்ன அந்த பெர்முடா தலையனுங்கனு நினனச்சியா 114 அடிக்கறதுக்கு. நேத்து அடிச்சதை விட ஒரு ரன் கம்மியா அடிப்பனு தோனுது.
ஷேவக் : என்ன 113ஆ?
கங்கூலி : இல்லை 14.

10 ஓவர்ல இந்தியா 42 ரன் அடிச்சிருக்கு.
கங்கூலி : இந்த ரெண்டு பன்னாடைங்களும் போடறதை பார்த்தா அடிக்க முடியும்னு தோனலை. பேசாம இன்னும் 6 ஓவருக்கு டொக்கு வச்சிட்டு ஸ்பின்னர்ஸ் வந்தோன அடிக்கலாம்.
ஷேவாக் : போன ஓவர் வாஸ் போடும்போது கொஞ்சம் சோர்வா இருந்தான். அதனால் இந்த ஓவர்ல நீ அடிச்சு ஆடு, நான் அடுத்த ஓவரை பார்த்துக்கறேன். (மனசுக்குள்ளே "எப்படியும் இந்த நாயி அடிச்சு ஆடறேன்னு அவுட்டாயி போயிடும். அடுத்த கேப்டன் நாந்தான்" )

அவர் எதிர்பார்த்த மாதிரியே கங்கூலி அடிச்சு ஆட ட்ரை பண்ணி அவுட்டாயிடறாரு. ஸ்கோர்போர்ட்ல இருந்து கங்கூலி பேரை எடுத்துட்டு சச்சின் பேரை போடறதுக்குள்ள அவரும் அவுட்டாயி திரும்பராரு. அப்போ எதிர்ல உள்ள வர திராவிட்,

திராவிட் : ஏய் மூதேவி, அதான் ரெண்டு பாலை தொடாம விட்டில்ல.இந்த பாலையும் விடவேண்டியது தான?
சச்சின் : நானும் அப்படித்தான் நினைச்சேன். மூனாவது பால் ஆடுறப்ப பூஸ்ட் விளம்பரம் ஞாபகம் வந்துடுச்சு. அதுல ஆடர மாதிரி நினைச்சுகிட்டு பாலை தொட்டேன். அவுட்டாயிடுச்சு.அடுத்த மேட்சுல அடிக்கறேன்.
திராவிட் : அடுத்த மேட்ச் உன் பையனோட உங்க வீட்டு கிரவுண்ட்ல தான் ஆடப்போற. உன்னையெல்லாம் தலையில கட்டி என் கழுத்த அறுக்கறாங்க. அப்படி என்ன அவசரம் உனக்கு?
சச்சின் : பின்ன. போன மேட்சுல கொஞ்ச நேரம் நின்னு ஆடிட்டு போறதுக்குள்ள, ஃப்ரிட்ஜ்ல இருந்த பீரையெல்லாம் காலி பண்ணிடுச்சுங்க பரதேசிங்க. அதான் அவசரமா போறேன். ரேண்டு பீராவது தேத்தனும்ல.
திராவிட் ; ஓ இதுல இப்படி ஒன்னு இருக்கா. நீ சொல்றதும் சரிதான். அப்படியே எனக்கு ரெண்டு எடுத்து ஒளிச்சு வை.

திராவிடும், ஷேவாக்கும் எதிர்பார்த்ததை விட கொஞ்ச நேரம் தாக்கு பிடிச்சு ஆடறாங்க.ஸ்கோர் 20 ஓவர்ல 89 ரன்.

திராவிட் : ஆமா போன உலகக்கோப்பைல சிக்ஸா அடிச்ச,இப்ப என்ன ஆச்சு?
ஷேவாக்: அப்போ ஒவ்வொரு சிக்ஸ் அடிக்கரதுக்கு முன்னாலயும் எங்கம்மா ரிலையன்ஸ் ஃபோன்ல கூப்பிடுவாங்க. இந்த தடவை அவங்க ஃபோன்ல சார்ஜ் இல்லை. அதான்.
திராவிட் : த்த்த்தூதூ. இதெல்லாம் ஒரு பொழப்பு?
ஷேவாக் : (மனசுக்குள்ள என்னை பார்த்து துப்பிட்டியா? இந்த ஓவர்ல அவுட்டாயி உன்னை என்ன பண்றேன் பாரு)

ஷேவாக் அவுட்டாகி போறரு. திராவிட் அவரை கூப்பிட்டு,

திராவிட் : ஏண்டா அவன் தான் ஸ்லிப்ல ஒருத்தனை நிக்க வச்சிருக்கானே அப்புறம் ஏண்டா அவன்கிட்டயே தூக்கி குடுக்கறே.
ஷேவாக் : இல்லைண்ணே ஸ்லிப்ல நின்னு தூங்கிகிட்டு இருக்கான் அந்த பன்னாடை. என்னை டைவர்ட் பண்ற மாதிரி கொட்டாவி வேற விடுறான். அதான் அவனை அலர்ட்டா ஆக்கறதுக்கு கேட்ச் குடுத்தேன்.
திராவிட் : எல்லாரும் சொல்லி வச்சு எனக்கு குழி பறிக்கறீங்களா? போங்கடா நானே பார்த்துக்கறேன்.

அடுத்து வர யுவராஜும் தேவையில்லாம ரன் அவுட்டாயி போறாரு. அப்போ

திராவிட் : டேய் ப்ரில்கிரீம் மண்டையா, அதான் பால் நேரா ஃபீல்டர் கிட்ட போகுதே அப்புறம் ஏண்டா ஓடி வந்து ரன் அவுட்டான?
யுவராஜ் : இந்த பேச்சுக்கும் ஒன்னும் குறைச்சலில்லை. நான் தான் ஓடிவந்தேன்ல நீயும் வரவேண்டியது தான்?உனக்கு சுவருன்னு பேரு வெச்சதுக்கு குட்டிச்சுவருன்னு பேர் வச்சிருக்கலாம்
திராவிட் : நீ ஓடி வந்தது எங்கேடா தெரியுது. மண்டைல பூசியிருக்கர க்ரீம்ல க்ளேர் அடிச்சு கண்ணே தெரிய மாட்டேங்குது.

அடுத்து வர நட்சத்திர ஆட்டக்காரர் டோணி முதல் பால்ல அவுட்டாகி போறாரு. மகா கடுப்பான திராவிட் அவரை கூப்பிட்டு,

திராவிட் : டேய் சடையாண்டி, அவன் தான் ஸ்டம்புக்கு நேர பாலை போடறான்ல. கையில அவ்வளவு பெரிய பேட் வச்சிருக்கியே, அதால ஆடாம ஏண்டா காலை குறுக்கால விட்ட?
டோணி : இல்லன்னே, பேட்ட வைக்கலாம்னு தான் குனிஞ்சேன். அதுக்குள்ள முடி முன்னால் விழுந்து கண்ணை மறைச்சிடுச்சு
திராவிட் : போடி மாவு, ஏற்கனவே வீட்டு சுவத்தை எல்லாம் இடிச்சுட்டானுங்க. இனி உனக்கு சங்கு தான். முடிய வெட்டு முடிய வெட்டுனு எவ்வளவு தடவை சொன்னேன் கேட்டியாடா முள்ளம்பன்றி தலையா.
டோணி : கவலைப் படாதீங்கண்ணே, அதான் அகர்கர் இருக்கான்ல.
திராவிட் : யாரு அவனா? முப்பது யார்ட் சர்கிளுக்கு வெளியே அடிச்சா சிக்ஸ் இல்லைடா, பவுண்டரிக்கு வெளியே அடிக்கனும்னு எவ்வளவோ தடவை சொல்லிட்டேன். கேக்க மாட்டேங்கறான். அவனை வெச்சு உருப்பட்டாப்ல தான்.
டோணி : அப்புறம் ஏன்னே அவனை டீம்ல சேர்த்தீங்க?
திராவிட் : நான் எங்கேடா சேர்த்தேன். அந்த சச்சின் தான் அடம் பிடிக்கறான். ஒட்டடைக் குச்சிக்கு, துடைப்பகட்டை ரெகமண்டேஷன்.

அடுத்து வரும் அகர்கர் அதிசயமாக தாக்கு பிடித்து ஆறு ரன்கள் அடிச்சிருக்கார்.

திராவிட் : டேய் அதான் ஆறு ரன் அடிச்சு கலக்கிட்டியே, அப்புறம் ஏண்டா இப்படி பொனம் மாதிரி மூஞ்சிய வச்சிருக்க?
அகர்கர் : உங்க கிட்ட சொல்றதுக்கென்ன. நானே விழுந்து புரண்டு ஒரு ஃபிகரை செட் பண்ணி வச்சிருந்த்தேன், அது இப்போ நம்ம முனாஃபோட சுத்துது.
திராவிட் : ஏண்டா, அந்த ஃபிகர் கிட்டயே கேக்க வெண்டியது தான?
அகர்கர் : கேட்டேனே. என்னை விட முனாஃப் நல்லா போடறானாம். நிறைய விக்கெட் எடுக்கறானாம். அதான் என்னை கழட்டி விட்டுடுச்சு.
திராவிட் : நீயும் நல்லா போட்டு விக்கெட் எடுக்க வேண்டியது தான?
அகர்கர் : எண்ணன்னே என்னை பத்தி தெரிஞ்சு தான் பேசுறீங்களா? அதெல்லாம் நம்ம கையிலயா இருக்குது. என்னால முடிஞ்ச விஷ்யம்னா பண்ணலாம். விக்கெட் எடுக்கறதெல்லாம் நம்ம சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம்னே.

சிறிது நேரத்தில் அகர்கரும் அவுட்டாகிப் போக, திராவி தனியாளாக வீரத்துடன் போராடுகிறார் :). மலிங்கா வீசும் ஓவரில் நான்கு பவுண்டரி அடிச்சுட்டு சங்கக்கராவை பெருமையாக பார்க்கிறார்.

சங்கக்கரா ; அடிச்சதெல்லாம் ஓசி ஃபோரு. இது பார்க்கறதை பாரு. இதைத்தான் அணையப்போற விளக்கு பிரகாசம எரியுதுன்னு சொல்லுவாங்க. அடுத்த ஓவர்ல இருக்குதுடி உனக்கு ஆப்பு.

வழக்கம் போல் சைக்கிள் ஸ்டாண்டாக அனைத்து ஆட்டக்காரர்களும் அவுட்டாக, முனாஃபும், ஹர்பஜனும் கடைசி விக்கெட்டுக்கு ஆடுகிறார்கள்.

சங்கக்கரா : ஏண்டா பன் தலையா, அதான் எல்லாரும் அவுட்டாயி பொயிட்டாங்கள்ல, நீங்க மட்டும் எதுக்குடா துள்ளுறீங்க?
ஹர்பஜன் : எங்களையெல்லாம் யாரும் விளம்பறத்துல நடிக்க கூப்பிடறதில்லை. இப்படி எதாவது அடிச்சாலாவது கூப்பிடுவாங்கள்ல.அதான்.
சங்கக்கரா : நீங்க திருந்த மாட்டீங்களாடா? உங்களுக்காக சிகாகோல இருந்து சிறில்னு ஒருத்தர் ஃபேக்ஸ் அனுப்பியிருக்காரு.
ஹர்பஜன் : என்னவாம்?
சங்கக்கரா : போய் விவசாயத்தை பாருங்கடா!னு சொல்லியிருக்காரு.
ஹர்பஜன் : இது கூட நல்ல யோசனை தான். நாங்க விவசாயம் பண்ற அழகை பார்த்துட்டு சுகுனா பம்ப், ஸ்பிக் யூரியானு எதாவது விளம்பரத்துல நடிக்க கூப்பிடுவாங்களா?

சங்கக்கரா மயங்கி விழுகிறார்!!

போட்டி முடிந்தபின், சிவராமகிருஷ்ணன் திராவிடிடம் கேள்விகள் கேட்கிறார்.

சிவா: திராவிட், இன்னைக்கு தோத்ததை பத்தி என்ன சொல்ல விரும்பறீங்க?
திராவிட் : hmm..It's a disappointing day for us. Our bowlers didn't bowled well, batsmen didn't bat well and fielder's didn't field well.
சிவா: ஏண்டா, பவுலிங்கும் போடமாட்டிங்க, ரன்னும் அடிக்க மாட்டிங்க, விழுந்து ஃபீல்டிங்கும் பண்ண மாட்டிங்க! அப்புறம் என்ன ம....க்குடா கிளம்பி வந்தீங்க?
திராவிட் : ஹி.ஹி.. போன வருஷம் ஆட வந்தப்ப சில கரீபியன் தீவுகளை சுத்தி பார்க்க நேரமில்லாம போச்சு.அதுக்கு தான் சுத்தி பார்க்கலாம்னு கம்பைண்ட் ட்ரிப்பா இங்கே வந்தோம்.
சிவா : வந்தது தான் வந்தீங்க. 12 பேர் மட்டும் வந்திருக்கலாம்ல. எதுக்குடா சும்மா பெஞ்சுல உக்கார்ரதுக்கு பதான்,ஸ்ரீசாந்த், கார்த்திக் மூனு பேரையும் கூட்டிகிட்டு வந்தீங்க?
திராவிட் : ஆறு டிக்கெட் வாங்கினா ஒன்னு ஃப்ரீன்னு சொன்னாங்க. அதான் 12 டிக்கெட்டுக்கு 2 டிக்கெட் ஃப்ரீயா கிடைக்குதேன்னு கூட்டிகிட்டு வந்தோம்.
சிவா : அப்படி பார்த்தாலும் ஒரு டிக்கெட் செலவு தானடா?
திராவிட் : அது ஒன்னும் பெரிய விஷயமில்லை. இந்தியாக்கு போன உடனே அஞ்சால் அலுப்பு மருந்து விளம்பரத்துல நடிச்சு அந்த காசை சம்பாதிச்சுடலாம் :)

சிவராமகிருஷ்ணனும் சுருண்டு விழுகிறார் ! !