Friday, March 23, 2007

ஒரு இந்திய ரசிகனின் புலம்பல்


கோடிக்கணக்கான ரசிகர்களோட கனவை கனவாவே ஆக்கிட்டாங்க இந்திய அணியினர். நான் இப்போ வேண்டிக்கறதெல்லாம் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் ஜெயிக்கனும்னு தான். எல்லாரோட எதிர்பார்ப்பை, ஆசையை, கனவை கிழிச்சு குதறிப்போட்டுட்டாங்க. இந்திய அணியை வெறித்தனமா சப்போர்ட் பண்ண நான் இந்தியா அடுத்த சுற்றுக்கு போகக்கூடாதுன்னு தான் இப்போ நினைக்கிறேன். You don't deserve it guys.உங்களை பத்தி பெருமையா எழுதினதுக்காக வெக்கப்படறேன்,வருத்தப்படறேன்.

பங்களாதேஷ் கிட்ட தோத்தப்ப எதோ பேட் ல்க் அதனால் தான் தோத்தோம், நிச்சயமா இலங்கைய ஜெயிச்சு அடுத்த சுற்றுக்கு போவோங்கற நம்பிக்கை இருந்துச்சு. இன்னுமாட எங்களை நம்பறீங்கன்னு இன்னைக்கு நிரூபிச்சுட்டாங்க. இதுக்கு மேல கேவலமா ஒரு அணி, அதுவும் பத்தாயிரம் ரன் அடிச்ச மூனு பேர் இருக்கற அணி ஆட முடியுமான்னு தெரியலை. தயவு செய்து மேட்ச் ஃபிக்ஸிங் செஞ்சாவது பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு போக வைக்கனும். அவங்களே நம்மளை விட நல்லா ஆடுவாங்கங்கற நம்பிக்கை இருக்கு. ஒருநாள் தோத்தா பரவாயில்லை. மறுபடியும் மறுபடியும் அதே மாதிரி தோக்குறப்போ வெறுப்பு தான் வருது. இன்னைக்கு ஆடின விதத்தை பார்க்கறப்போ இவங்களை பத்தி பெருமையா சொல்றதெல்லாம் just hypeனு தோனுது. இப்பவாவது உனக்கு புத்தி வந்துதேனு சந்தோஷ்,சிறில் எல்லாம் சிரிக்கறது கேக்குது. என்னங்க பண்றது..நான் கொஞ்சம் ஸ்லோ..






இவ்வளவு பணம் குவிக்கறிங்களேடா, அதுக்கு கொஞ்சமாவது பொறுப்பா விளையாடனும்னு தோனலையா உங்களுக்கு. உங்களை சொல்லி குத்தமில்ல. உங்களை நம்பி இன்னும் உக்காந்து பார்க்கறோமே எங்களை சொல்லனும். திரும்ப பெர்முடா, ஸ்காட்லாந்துனு எதாவது அணி கிடைச்சா வெளுத்து வாங்குங்க.கேன மாதிரி கைதட்டி ரசிக்க நாங்க இருக்கோம். எப்படியும் உங்களுக்கு பணம் கிடைக்க போகுது, உங்களுக்கு என்ன கவலை. டி.வில காண்பிக்கறப்ப மட்டும் இஞ்சி திண்ண குரங்கு மாதிரி மூஞ்சிய வச்சிகிட்டு சோகமா இருக்கற மாதிரி போஸ் குடுங்க. இனிமே மேட்ச் பார்த்து நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்கடானு நல்ல பாடம் கத்து குடுத்துட்டிங்க.

தயவு செஞ்சு நீங்க இதுவரைக்கும் சம்பாதிச்ச காசுல கொஞ்சத்தை எதாவது புக்கி கிட்ட குடுத்து பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு போக வைங்க. கிரிக்கெட்டுக்கு கொஞ்சம் நல்லது பண்ன புண்ணியமாவது கிடைக்கும்.

பி.சி.சி.ஐ கிட்ட கேக்கறது எல்லாம் ஒன்னே ஒன்னு தான். தயவு செஞ்சு வயசான காலி பெருங்காய டப்பாக்களை எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு இளம் வீரர்களை கொண்டு வாங்க. அதனால் தொடர்ந்து 15, 20 மேட்ச் தோத்தாலும் பரவாயில்லை. அணில ஒரு புத்துணர்சியாவது வரும். இப்ப இருக்கவங்க ஆடினாலும் தோத்து தான் போறோம். அதுக்கு புது ஆளுங்களை முயற்சி பண்ணி அவங்களுக்காவது வாய்ப்பு கொடுக்கலாம். சச்சின் அவர்களே, நீங்க நிறையா சாதனை பண்ணியிருக்கீங்க. பெரிய ப்ளேயர் தான். ஆனா every good thing should come to an endனு சொல்ற மாதிரி உங்களுக்கான நேரம் வந்துடுச்சு. நீங்களாவே ரிடையர் ஆகறது உங்க கடந்த கால சாதனைகளுக்கு மரியாதை. உங்களை அணிய விட்டு தூக்க வேண்டிய தர்மசங்கடமான் நிலைமைய குடுக்காதீங்க. இதே தான் இன்னைக்கு சொதப்பின எல்லா பெரிய ப்ளேயர்களுக்கும். நீங்க பண்ண நல்லதெல்லாம் போதும். புதுசா வரவங்க பாத்துப்பாங்க. நீங்க எல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. வேறா ஏதாவது அணில பயிற்சியாளர் பதவி காலியாகும், இல்லைன்னா வர்ணனையாளர் பதவி காலியாகும். You guys are fit to talk cricket, not to play cricket. இன்னைக்கு ஒரு மேட்சுல தோத்ததை வச்சு இதை சொல்லலை. சமீபகாலமா நீங்க ஆடறதை வச்சு சொல்றேன். I really feel ashamed for writing about you in my previous posts.

எப்பவும் இந்தியா தோத்த இந்த மாதிரி திட்டிட்டு, புலம்பிட்டு அடுத்த நாளே அவங்க ஆடறதை பார்க்க உக்காந்திடுவேன். ஆனா இந்த முறை அவங்க குடுத்த அதிர்ச்சி ரொம்ப அதிகம். இனியாவது நல்ல திறமையான, கிரிக்கெட்ட பணம் காய்க்கும் மரமா பார்க்காம கிரிக்கெட்டா பார்க்கற அணிய சப்போர்ட் பண்ணுவோங்கற முடிவுக்கு வந்துட்டேன்.

WELL DONE SRILANKA FOR KICKING A...HOLES OUT OF WORLDCUP! ! !

Thursday, March 22, 2007

நாளை நமதே !

ஒருவழியா கால்குலேட்டரை தூக்கிப் போட்டுட்டு, ஜெயிச்சா போதும் அடுத்த சுற்றுக்கு போயிடலாங்கற நிலைமைக்கு வந்திருக்கோம் இலங்கையோட புண்ணியத்தால. இலங்கை ஏற்கெனவே அடுத்த சுற்றுக்கு போயிட்டதால நாளைக்கு அவ்வளவு சீரியஸா விளையாடமாட்டாங்கன்னு சொல்லவும் முடியாது. ஏன்னா அவங்க நாளைக்கு தோத்தா, சூப்பர் 8க்கு 0 புள்ளிகளோட போகனும். இந்தியா 2 புள்ளிகளோட போகும். அடுத்த சுற்றுல இந்த 2 புள்ளிகள் ரொம்ப ரொம்ப முக்கியம். அதனால் இலங்கையும் நிச்சயமா ஜெயிக்கத்தான் பார்ப்பாங்க.

நாளைக்கு அணில உத்தப்பா இருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன். அவருக்கு பதிலா கார்த்திக் உள்ள வர வாய்ப்பிருக்கு. அதே மாதிரி அகர்கருக்கு பதிலா பதானை கொண்டு வந்தால் நல்லா இருக்கும். உத்தப்பாவுக்கு பதிலா பதானை கொண்டுவரவும் வாய்ப்பிருக்கு. அப்போ ஜாகிர்,முனாஃப்,பதான்,அகர்கர்,கும்ப்ளே/ஹர்பஜன்னு அஞ்சு பவுலர்கள் இருப்பாங்க. இந்தியா இந்த முடிவை எடுக்கவும் வாய்ப்புகள் அதிகம். ஏன்னா நாளைக்கு இலங்கை கிட்ட நாலு பவுலர்களையும், அஞ்சாவது 10 ஓவருக்கு ஷேவாக்,சச்சின்,யுவராஜ் எல்லாரையும் வச்சு ஒப்பெத்தறது ரொம்ப கஷ்டம். இருக்கற நாலு பவுலர்கள்ல யாராவது ஒருத்தர் சொதப்பினாலும் ரொம்ப சிக்கலாயிடும். அதனால அஞ்சு பவுலர்களோட போறது நல்லது. அப்போ பதானை சேர்த்துகிட்டா பேட்டிங்கும் கொஞ்சம் பலமாகும். உத்தப்பா 5 ரன் எடுத்து அவுட்டாகறத விட, பதான் 5 ரன் எடுத்து அவுட்டானாலும், பவுலிங்க்குக்கு உதவுவாரு. ஷேவாகே நான் ஆடமாட்டேன்னாலும் திராவிட் விடமாட்டாரு. போன போட்டில சதமடிச்சு நல்லா சிமெண்ட் போட்டு இடத்தை பிடிச்சிட்டாரு. அதனால கண்டிப்பா ஷேவாக் இருப்பார்.

ஜெய்வர்தனே டாஸ் ஜெயிச்சா கண்டிப்பா பவுலிங் தான் எடுப்பார். அதேசமயம் திராவிட் ஜெயிச்சால் பேட்டிங் எடுக்கனும்கறது என்னோட கருத்து. பிட்சுல ஸ்விங் இருக்கும், ஆடரது கஷ்டம்னாலும், முதல் பத்து ஓவரை தாக்கு பிடிச்சிட்டா கொஞ்சம் ஈஸி தான். நேத்து இலங்கை பங்களாதேஷ் கிட்ட பண்ண மாதிரி. முதல் பத்து ஓவர்ல 60,70 ரன் அடிக்கனும்னு அவசியமே இல்லை. ஒன்னு ரெண்டுன்னு ஸ்டைரைக்க ரொட்டேட் பண்ணாலே, ரன்னும் வரும் கான்ஃபிடன்ஸும் வரும். அதே சமயத்தில பவுலரையும் பதட்டப்படுத்தும். அஞ்சு பந்து டொக்கு வச்சிட்டு ஆறாவது பந்தை 4 அடிக்க போய் அவுட்டாகறதுக்கு பதில் ஸிங்கிள்,2ன்னு தட்டி தட்டி ஒரு ஓவருக்கு 4 ரன் எடுத்தா போதும். 10 ஓவருக்கு 40/0 இருக்கறது 10 ஓவருக்கு 60/3னு இருக்கறத விட நல்லது தான.

ஒருவேளை வியாழக்கிழமை இரவு மழை அதிகமா இருந்தா டாஸ் ஜெயிச்சதும் பவுலிங் பண்றதை பத்தி யோசிக்கலாம். இல்லைன்னா முதல்ல பேட்டிங் பண்றது தான் நல்லது. 250 ரன்ன சேஸ் பண்ணா கூட திடீர்னு ரெண்டு விக்கெட் விழுந்துட்டா ப்ரெஷர் அதிகமாயிடும், ரன்ரேட் கம்மியாயிடும். அப்புறம் அடிச்சு ஆட முயற்சி பண்ணி இன்னும் கஷ்டம். இந்தியா சேஸ் பண்ணி வின் பண்ணதேயில்லைனு சொல்லலை. இந்த மாதிரி வாழ்வா சாவான்னு இருக்கற சூழ்நிலைல முதல்ல பேட்டிங் பண்றது பாதுகாப்பானது.

அடுத்தது பேட்டிங் ஆர்டர். நாளைக்கு கொஞ்சம் ஃபெளெக்ஸிபிளான பேட்டிங் ஆர்டர் இருக்கறது நல்லது. கங்கூலியும் ஷேவாக்கும் தான் தொடங்குவாங்க. அதுல எந்த மாற்றமும் இருக்காதுன்னு நினைக்கிறேன். ஒருவேளை முதல் விக்கெட் 2,3 ஓவருக்குள்ள போயிடுச்சுன்னா, ஒன்டவுனா திராவிடை இறக்கலாம். மறுபடியும் ஒரு விக்கெட் போகாம அடுத்த ஆறு ஏழு ஒவருக்காவது ஆட வேண்டியது முக்கியம். அதே சமயம் ரன்ரேட்டையும் ஒரு நாலு ரன்லயாவது மெயின்டெய்ன் பண்ணனும். ஒருவேளை 10 ஓவருக்கு மேல முதல் விக்கெட் போய், ரன் ரேட் கொஞ்சம் கம்மியா இருந்தா அடிச்சு ஆடற யாரையாவது இறக்கி ரன்ரேட்டை உயர்த்த முயற்சி பண்ணனும். முக்கியமானது நடந்ததை நினைக்காம பயப்படாம ஆடறது தான். முன்னால ஒரு பதிவுல சொன்ன மாதிரி 'Play your natural game.Be committed to the game'. அதிரடியா அடிச்சு ஆடனும்னு இல்லை ஆனா ஸாலிட்டா ஆடனும். பவுலரை செட்டில் ஆக விடக்கூடாது. அந்த தப்பை தான் பங்களாதேஷ் கிட்ட பண்ணோம். ஒரேயடியா தடவாம, அடிக்கடி பீட்டன் ஆகாம், ஸாலிட்டா பந்தை அடிச்சாலே பவுலருக்கு ஏதாவது வித்தியாசமா பண்ணனும்னு தோனும். அப்போ நிறைய லூஸ் டெலிவரி கிடைக்க வாய்ப்பிருக்கு. நாளைக்கு Mental Game தான் பலன் கொடுக்கும்.

ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து ஆடி 100 அடிச்சு மறுமுனைல ஆடறவங்க ஆளுக்கு ஒரு முப்பது ரன் அடிச்சு அவருக்கு ஸ்டேண்ட் குடுத்தாலே போதும். நல்ல ஸ்கோர் அடிச்சிடலாம்.கங்கூலி போன ரெண்டு மேட்சுலயும் ஒருமுனைல நிலைச்சு நின்னு ஆடுனாலும், கொஞ்சம் வேகமா ரன் எடுக்கவும் முயற்சி பண்ணனுங்கறது என்னோட அபிப்ராயம். விக்கெட்ட காப்பத்த வேண்டியது முக்கியம்னாலும், ஒண்ணு ரெண்டுன்னு எடுத்து ரன்ரேட்டை பாதுகாக்கறதும் முக்கியம்.

பவுலிங்கும், ஃபீல்டிங்கும் சுமார் தான். இதை வச்சு இலங்கைய சமாளிக்கறது கஷ்டம் தான். நாளைக்கு அநேகமா கும்ப்ளேக்கு பதில் ஹர்பஜன் மறுபடியும் வருவாருன்னு நினக்கிரேன். இலங்கைல இடதுகை ஆட்டக்காரர்கள் நெறைய பேர் இருக்கறதால ஹர்பஜன்னுக்கு தான் வாய்ப்பு அதிகம். பார்ப்போம் திராவிடும் சாப்பலும் என்ன முடிவு பண்றாங்கன்னு. நாளைக்கு ஆடப்போற பிட்ச்ல இதுவரைக்கும் எந்த போட்டியும் நடக்கலை. இந்த பிட்சுல முதல்ல, ஸ்விங்கும் பவுண்சும் இருந்தாலும், அதுக்கப்புறம் ஆடறதுக்கு ஈஸியா இருக்கும்னு சொல்றாங்க. எல்லாத்தையும் கவனத்தில எடுத்துக்கனும். கண்டிப்பா அஞ்சு பவுலர்க்ளோட போறது தான் நல்லது.

நாளைக்கு இந்தியா ஜெயிச்சா, உடனே மேட்ச் ஃபிக்ஸிங்னு சொல்றதுக்கு நிறைய பேர் கிளம்பிடுவாங்க. அவங்களுக்கு எல்லாம் சொல்றது இதுதான். மேட்ச் ஃபிக்ஸிங் நடந்திருக்கு, இல்லைன்னு சொல்லலை. அதுக்காக இந்தியா தோத்தா உடனே காசு வாங்கிட்டாங்கன்னு சொல்றதும், ஜெயிச்சா காசு குடுத்து ஜெயிக்க வச்சாங்கன்னு சொல்லாதீங்க. சில மேட்சுல நடந்ததுக்காக எல்லா மேட்சையும் சந்தேகப்பட்டா, அப்புறம் க்ரிக்கெட்டோட சுவாரசியமே போயிடும். இந்தியா நாளைக்கு தோத்து வெளியேறினா, அதுக்காக இந்தியால எல்லாரும் பார்க்காம இருக்கப்போறதில்லை. கிரிகெட்ட ரசிக்கறவங்க இந்தியா ஆடுனாலும் ஆடாட்டியும் பார்ப்பாங்க. இந்தியா ஆடுனா த்ரில் அதிகம் அவ்வளவு தான். ஆக எல்லாத்தையும் மறந்துட்டு இந்தியா நாளைக்கு ஜெயிக்கனுங்கறதை மட்டும் நினைப்போம். கடவுள் சோதிச்சாலும் கைவிட மாட்டாரு :)

நான் கொஞ்சம் weird ! !

தன்னோட weird குணங்களை பத்தி சொல்லும்பொழுது போறபோக்குல எனக்கு ஒரு பாலை போட்டுட்டு போயிட்டாரு நம்ம சிறில். கிரிக்கெட் பத்தி மட்டும் எழுதிட்டு இருந்த எனக்கு என்னைப் பத்தியும் கொஞ்சம் எழுத களம் அமைச்சுக் குடுத்ததுக்காக அவருக்கு ஒரு நன்றி!

அஞ்சு குணங்களை சொன்னா போதுமாம். அதனால நான் weirdனு நினைக்கிற என்னோட அஞ்சு பெரிய விஷயங்கள் உங்களுக்காக (இதுலயும் ரெண்டு கிரிக்கெட் சம்பந்தப்பட்டது தான் )

1. சாப்பிடும் பொழுது எதாவது புக் படிக்கறது. படிக்க ஒரு புக் இல்லைன்னா சாப்பாடு இறங்காது. சாப்பாடு இல்லாம் புத்தகம் படிக்கலாம் ஆனா புத்தகம் இல்லாம சாப்பிட முடியாது நம்மால.என் அம்மா, அக்கா, மனைவி எல்லாரும் எவ்வளவோ சொல்லி பார்த்துடாங்க. நான் திருந்தற மாதிரி இல்லை. இப்பல்லாம் என் வீட்டுக்காரம்மாவும் சாப்பிடும் பொழுது புத்தகம் படிச்சிகிட்டே சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. என்னால முடிஞ்ச நல்ல காரியம் :) . படிச்சிகிட்டே சாப்பிட்டா ருசியே தெரியாதும்பாங்க. சிலசமயம் அது நல்லது தாங்க :). ஒரு தடவை பருப்பே போடாம பண்ண பொங்கலை கூட தெரியாம சாப்பிட்டுட்டு போயிருக்கேன்னா பார்த்துக்கோங்க :)

2. வண்டி ஓட்டிட்டு போகும்பொழுது முன்னால போற காரோட நம்பரை கூட்டி என்ன நம்பர் வருதுன்னு பார்க்கறது. அந்த காரோட நம்பர்ல எதாவது சிறப்பு இருக்கா (உதாரணமா எனக்கு தெரிஞ்ச யாரோட பிறந்தநாளாவது) அப்படின்னு யோசிக்கறது வழக்கம். இது எப்ப ஆரம்பிச்சுதுன்னு தெரியாது. ஆனா இன்னும் தொடர்ந்துகிட்டு இருக்கு. இதனால எந்த பயனும் இலலைன்னாலும், சில சமயம் கவனம் சிதறும். நானும் இதை நிறுத்தனும்னு பார்க்கறேன் முடியலை.

3. கொழுகொழுன்னு எதாவது குழந்தைய பார்த்தா உடனே அதோட கன்னத்தை கிள்ளனும்னு தோனும்( குழந்தை அழுகாத அளவுக்கு தான்). முன்னெல்லாம் சொந்தக்காரங்க குழந்தைங்க யாரையாவது கிள்ளிகிட்டு இருந்தேன். இப்பொ என் பையனை கிள்ளி அதனால் தெனமும் திட்டு வாங்கிட்டு இருக்கேன். இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு பையன் பெரியவனாகி உதைக்கப் போறான் :)

4. கிரிக்கெட் பார்க்கும்பொழுது எதாவது ஒரு இடத்துல உக்காந்து, இந்தியா நல்லா ஆட ஆரம்பிச்சிட்டா மேட்ச் முடியற வரைக்கும் கம் போட்டு ஒட்டுன மாதிரி அதே இடம் தான். அடுத்தடுத்த மேட்சுக்கும் அதே இடம் தான். இந்தியா தோக்கற மேட்ச் வரைக்கும் இது கண்டின்யூ ஆகும். அப்புறம் வேற இடம் தேட வேண்டியது தான். எனக்கு தெரிஞ்சி கிரிக்கெட் பார்க்கற முக்கால்வாசி பேரு கிட்ட இந்த சென்டிமென்ட் இருக்கும்னு நினைக்கிறேன். இதுல நான் மட்டுமில்லை, மத்தவங்களும் அவங்க இடதை விட்டு நகரக்கூடாது. அப்ப தான் ஒர்க் அவுட் ஆகும் :) . இதுனால் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கறத விட எனக்கு திட்டு கிடைக்கறது தான் அதிகம்.

5. மேட்ச் ஃபிக்ஸிங், பெட்டிங், டைம் வேஸ்ட்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு சொன்னாக்கூட கிரிக்கெட் மேல வெறியா இருக்கறது. இந்தியா கேவலமா தோத்தாக்கூட கொஞ்ச நேரத்துக்கு எரிச்சலா இருக்கும்.இனிமே கிரிக்கெட்டே பார்க்கக் கூடாதுன்னு தோனும். ஆனா நைட்டே ஹைலைட்ஸ் பார்க்க உக்காந்திடுவேன். ஒரு படத்தை 10 தடவை 20 தடவை பார்க்கிற மாதிரி, இந்தியா ஜெயிச்ச மேட்சா இருந்தா முழு ரீப்ளேய கூட அலுக்காம பார்ப்பேன். காலைல பார்த்த மேட்ச் தானன்னு யாரவது எதாவது சொன்னா கூட இந்த காது to அந்த காது தான். இவ்வளவு வெறியா இருக்குறியே நீ பெரிய ப்ளேயரானு கேட்டு யாரும் மானத்தை வாங்கிடாதீங்க :( . போன உலகக்கோப்பை நடந்தப்போ சின்ன 6" டி.விய ஆஃபிசுக்கு எடுத்துட்டு போய், Requiremet Documents,technical Specification print out, அட்டை டப்பா எல்லாம் மூனு பக்கமும் வச்சு உள்ளே டி.வி வச்சு மேட்ச் பார்த்தேன்னா பார்த்துக்கோங்க :). என் ராசி இந்த தடவையும் பிடுங்க நிறைய ஆணி குடுக்காம நெட்ல மேட்ச் பார்க்க விட்டுட்டாங்க :)

அடுத்து என் பங்குக்கு நானும் அஞ்சு பந்து வீசனுமாமே..ஆறு பந்து வீசி ஒரு ஓவராக்கிடறேனே.இதோ என்னோட லிஸ்ட்

1. சிவபாலன்
2. SK ஐயா
3. கனவுலகம் கார்த்தி
4. தம்பி கதிர்
5. ஃபாஸ்ட் பவுலர் (உங்க உண்மையான் பேர் என்னங்க???? பிரெட் லீ, ஷேன் பாண்ட்னு எல்லாம் சொல்லாதீங்க :) )
6. சந்தோஷ்

இவங்க ஆறு பேரும் இந்த பதிவை படிப்பாங்களான்னு தெரியலை. படிக்கற யாராவது அவங்க கிட்ட சொன்னீங்கன்னா உங்களுக்கு 1000 பின்னூட்டம் பரிசாக தரப்படும்.

Wednesday, March 21, 2007

சூப்பர் 8க்கு செல்ல வழி


இன்னைக்கு நடந்த மேட்சுல இலங்கை 318 ரன் அடிச்சு பங்களாதேஷை பொளந்து கட்டிட்டாங்க .இன்னைக்கும் தீபாவளி கொண்டாடலாம்னு ஆசையோட இருந்த பங்களாதேஷுக்கு பொங்கல் குடுத்துட்டாங்க. எப்படி எல்லாம் ஆடக்கூடாதுன்னு நாம புரிய வச்சோம், எப்படியெல்லாம் ஆடனும்னு இன்னைக்கு இலங்கை புரியவச்சிட்டாங்க. எந்த பவுலரையும் செட்டில் ஆகவே விடலை. பவுண்டரியோ சிக்ஸோ அடிக்க முடியாத நேரங்கள்ல ஒன்னு,ரெண்டுன்னு எடுத்து தொய்வில்லாம ஆடினாங்க. பவுலர்களும் நல்லா பந்து வீசி பங்களாதெஷை 112 ரன்னுக்கு சுருட்டிட்டாங்க.Good Work Srilanka!

இந்த மேட்சை பத்தி அதிகமா பேசறதை விட்டுட்டு அடுத்து நாம் என்ன பண்ணா அடுத்த சுற்றுக்கு போக முடியும்னு பார்க்கலாம்.

இன்றைய நிலவரப்படி நம்ம க்ரூப்ல இருக்கற அணிகளோட புள்ளிகள் மற்றும் நெட் ரன்ரேட்.







CountryMatchesWonLostNo ResultPointsNRR
Srilanka220044.594
India211022.507
Bangladesh21102-2.002
Bermuda22000-5.0



இப்போதைய நிலவரப்படி நாம வெள்ளிக்கிழமை இலங்கைய வெற்றி பெற்றாலே போதும். ரன்ரேட் பத்தி அவ்வளவா கவலைப்பட வேண்டாம். எப்படின்னா உதாரணத்துக்கு இந்தியா 250 ரன் அடிச்சு இலங்கைய 240 ரன்னுக்கு அவுட்டாக்குதுன்னு வச்சுக்குவோம்.அப்போ இந்தியாவோட ரன்ரேட் 1.75 கிட்ட இருக்கும். இதேதான் இந்தியா 300 ரன் அடிச்சு, இலங்கையை 290க்கு அவுட்டாக்கினாலும், 200 ரன் அடிச்சு அவங்களை 190க்கு அவுட்டாக்கின்னாலும். 250 ரன் இலக்கை, இந்தியா இரண்டாவதா ஆடி 49 ஓவர்ல அடிச்சா கூட இந்தியாவோட ரன்ரேட் 1.7 கிட்ட இருக்கும். அப்போ இலங்கையோட ரன்ரேட் 2.94 இருக்கும்.

பெர்முடாவொட போட்டில பங்களாதேஷ், இந்தியாவோட ரன்ரேட்டை விட அதிகம் எடுக்க என்ன பண்ணனும்னு பார்க்கலாம்.

பங்களாதேஷ் முதல்ல ஆடி 300 ரன் எடுத்து, பெர்முடாவை 0 ரன்களுக்கு ஆல்அவுட் ஆக்கினா கூட அவங்க ரன்ரேட் 0.7 கிட்ட தான் இருக்கும். அதேமாதிரி பெர்முடா முதல்ல ஆடி 50 ரன் அடிச்சு, பங்களாதேஷ் அதை 2 ஓவர்ல அடிச்சா கூட ரன்ரேட் 0.3 தான் இருக்கும். ஆக ரன்ரேட் மூலமா பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு வர வாய்ப்பே இல்லை.

மக்கா வெள்ளிக்கிழமை ஜெயிச்சு அடுத்த சுற்றுக்கு வாங்கப்பா ! ! புலம்ப வச்சுடாதீங்க

வெள்ளிக்கிழமை மழை வருமா வராதான்னு தெரிந்து கொள்ள

Tuesday, March 20, 2007

சூப்பர் 8க்குள் நுழைந்தது இந்தியா ! ! !



எல்லாரும் இந்தியா சூப்பர் 8க்கு போகுமா போகாதான்னு கவலைப்பட்டுகிட்டு இருக்க, எல்லாரோட எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றி இன்னைக்கே சூப்பர் 8க்கு போயிடுச்சு இந்திய அணி.

இதுபற்றி கூறிய டிராவிட் "நாங்க தங்கியிருந்த ஹோட்டல் ராசியில்லாததால், ஒரு மாறுதலுக்காக சூப்பர் 8 மோட்டலுக்கு மாறிட்டோம். இப்ப எங்களை சூப்பர் 8க்கு போகலைன்னு யாரும் குறை சொல்ல முடியாதுல்ல " என்றார்.











சும்மா காமெடிங்க..யாரும் அடிக்க வராதீங்க :) :)

Monday, March 19, 2007

பாதிக் கிணறு தாண்டியாச்சு !



இன்னைக்கு பெர்முடாவை தோற்கடிச்சு பாதிக்கிணறு தாண்டி இருக்கு இந்தியா. ஆனா மீதி பாதியை தாண்டறது தான் கஷ்டமான விஷயம். அதையும் தாண்டலைன்னா வெளியேறவேண்டியது தான்.






பெர்முடாவுக்கு எதிரா 413 ரன் அடிச்சு உலகக்கோப்பையில சாதனை பண்ணியிருக்கு இந்தியா. இதுவரைக்கும் உலகக்கோப்பைல கென்யாவுக்கு எதிரா இலங்கை அடிச்ச 398 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோரா இருந்தது. இன்னைக்கு அதை முறியடிச்சுது இந்தியா. அதே மாதிரி ஒரு இன்னிங்ஸ்ல 18 ஸிக்ஸ் அடிச்ச தென்னாப்பிரிக்காவோட சாதனையையும் சமன் செஞ்சிருக்கு. அதே போல் 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைச்சிருக்கு. இதெல்லாம் பெர்முடாவுக்கு எதிராதான்னாலும், நம்ம அணியினருக்கு நல்ல கான்ஃபிடன்ஸ் தந்திருக்கும் இந்த வெற்றி.






ஷேவாக் இன்னைக்கு சதமடிச்சாலும், இலங்கையின் தரமான பந்து வீச்சுக்கு எதிரா தாக்குப்பிடிப்பாரான்னு தெரியலை. அதே மாதிரி இந்தியாவோட பவுலிங் மற்றும் ஃபீல்டிங் இன்னமும் முன்னேறனும். பெர்முடா கிட்டே ஒப்பேத்தின மாதிரி இலங்கை கிட்ட பண்ண முடியாது. என்னைக்கேட்டா அடுத்த போட்டில அகர்கருக்கு பதிலா பதானை கொண்டு வரலாம். மூனு விக்கெட் எடுத்திருந்தாலும் அவ்வளவு சிறப்பா அவர் பந்து வீசின மாதிரி தெரியலை. பதான் பேட்டிங்கும் கொஞ்சம் பண்ணுவாரு. அதனால் அடுத்த போட்டிக்கு என்னோட சாய்ஸ் பதான்.








சரி, இனி மீதி கினறு தாண்ட என்ன பண்ணனும்னு பார்க்கலாமா?



இன்று பெர்முடாவை 257 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சற்று ஆறுதல் தந்துள்ளது இந்தியா. இன்றைய நிலவரப்படி இலங்கையின் நெட் ரன்ரேட் 4.86, இந்தியா 2.5, பங்களாதேஷ் 0.14. மூன்று அணிகளும் 2 புள்ளிகள் பெற்றுள்ளன.

சாத்தியக்கூறு - 1
புதனன்று நடைபெறும் போட்டியில் இலங்கை பங்களாதேஷை வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளாகும். வெள்ளியன்று நடைபெறும் போட்டியில் இந்தியா இலங்கையை வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்த புள்ளிகள் நான்காகும். இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் பெர்முடாவை வெல்லும் பட்சத்தில் அதுவும் நான்கு புள்ளிகள் பெற்றிருக்க்கும். இந்நிலையில் மூன்று அணிகளும் 4 புள்ளிகளுடன் இருப்பதால் சிறந்த நெட் ரன்ரேட் உள்ள முதலிரு அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும். இதன்படி இந்தியா அடுத்த போட்டியில் வெல்வதுடன், சிறந்த ரன்ரேட் வித்தியாசத்திலும் வெல்ல வேண்டும். ஒருவேளை அடுத்த போட்டியில் இலங்கை 250 ரன்கள் அடித்து பங்களாதேஷை 200 ரன்களுக்கு அவுட்டாக்கினால், இலங்கையின் நெட்ரன்ரேட் 2.93 ஆக இருக்கும். இலங்கை 300 ரன்கள் அடித்து பங்களாதேஷ் 200 ரன்களுக்கு அவுட்டாக்கினால் 3.43 ஆக இருக்கும். இந்நிலையில் இந்தியா இலங்கையை குறைந்தது 100 ரன்கள் அல்லது 15 ஓவர்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் வெள்ளியன்றே அடுத்த சுற்றுக்கு செல்லலாம். இல்லையேல் ஞாயிறன்று நடைபெரும் பங்களாதேஷ்-பெர்முடா போட்டியின் முடிவு தெரியும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

சாத்தியக்கூறு - 2
புதனன்று நடைபெறும் போட்டியில் இலங்கையை பங்களாதேஷ் வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளாகும். இந்நிலையில் பங்களாதெஷ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி . இந்தியா இலங்கை இரு அணிகளும்
மோதும் போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும்.

சாத்தியக்கூறு - 3
இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டி வெற்றி தோல்வியின்றி முடியும் பட்சத்தில் இரு அணிகளும் ஒரு புள்ளி பெற்று மொத்தம் மூன்று புள்ளிகளாகும்.இந்நிலையில் இந்தியா இலங்கை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும்.

சாத்தியக்கூறு - 4
இலங்கை பங்களாதேஷையும் இந்தியாவையும் வெல்லும் பட்சத்தில், பங்களாதேஷ் பெர்முடாவிடம் தோற்றால், மீண்டும் நெட் ரன்ரேட் மூலம் இந்தியா அல்லது பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு செல்லும்.

இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.