Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Monday, March 26, 2007

அப்படி என்ன தாண்டா பேசுவீங்க?

லோக்கல்ல தென்னை மட்டை வச்சு ஆடறவங்களா இருந்தாலும், சர்வதேச லெவல்ல ஆடறவங்களா இருந்தாலும், ஒவ்வொரு ஓவர் முடிஞ்சதும், நடந்து வந்து பேட்டை தட்டிகிட்டு எதாவது பேசறது வழக்கம். இது சம்பந்தமா மெயில்ல வந்த ஒரு ஜோக்கையும், நடந்து முடிந்த இந்தியா-இலங்கை போட்டியையும் கலந்த ஒரு கற்பனை :)

இலங்கை 254 ரன் அடிச்சு இந்தியா 255 ரன் அடிச்சா வெற்றிங்கற நிலைமைல உத்தப்பாவும், கங்கூலியும் ஆட வர்றாங்க. முதல் ஓவர் சமிந்தா வாஸ் போடறாரு. உத்தப்பா தடவு தவுனு தடவி ரன் எதுவும் எடுக்காம ஆறு பந்தையும் ஆடி முடிச்சுடறாரு.

கங்கூலி : ஏண்டா, ஃபோரு சிக்ஸுனு அடீப்பனு பார்த்தா இப்படி தடவிட்டு வந்து சிரிக்கறேயே. உனக்கு உத்தப்பானு பேர் வச்சதுக்கு சொத்தப்பானு பேர் வச்சிருக்கலாம்.

உத்தப்பா : பேசாத நீயி.அவன் ஓடி வர்றது தான் தெரியுது. பந்து எங்கே விழுந்து எங்கே போகுதுன்னே தெரியலை.நானே சின்னதம்பி கவுண்டமணி மாதிரி ஒருவழியா தடவி அவுட்டாகாம நிக்கறேன். அடுத்து அந்த பஞ்சுமிட்டாய் தலையன் மலிங்கா போடுவான். நீ என்ன பண்ரனு பார்க்கலாம்.

கங்கூலி : இந்த பெங்காலிக்கு அந்த ரங்கோலி மண்டையன் எல்லாம் தூசுடா. பாரு இப்ப என் ஆட்டத்தை.

அடுத்த ஓவர் கங்கூலி வழக்கம் போல பந்துக்கு ஒத்தடம் குடுத்து ஆடிட்டு வரார்.
உத்தப்பா: (நக்கலான சிரிப்போட :) ) என்னமோ நாலு பால்ல ஆறு சிக்ஸ் அடிக்கபோற மாதிரி பேசுனே மாங்கா மண்டையா. ஏண்டா அடிக்கலை?
கங்கூலி : ஹி.ஹி அடிக்கலாம்னு தான் பார்த்தேன். எப்படியும் நீங்க எல்லாம் சீக்கிரம் அவுட்டாயி போகப்போறீங்க. நான் ஒரு 100 பால்ல 40 ரன் அடிச்சா அடுத்த கேப்டன் ஆயிடுவேன்ல. அதான். இது நமக்குள்ளயே இருக்கட்டும். நான் கேப்டன் ஆனா உன்னை வைஸ் கேப்டன் ஆக்கிடுறேன்.
உத்தப்பா : (மனசுக்குள்ள "போகாத ஊருக்கு வழி சொல்லுது பாரு பொறம்போக்கு. இது மறுபடியும் கேப்டனாயி நான் வைஸ் கேப்டன் ஆகறதுக்குள்ள எனக்கு சங்கூதிடுவாங்க" ). ஆகா நல்லா திட்டம் போடுறீங்க. கலக்கிடலாம்.

கொஞ்ச நேரத்துல உத்தப்பா உலக்கோப்பையில தனது அதிகபட்ச ஸ்கோரான 18 ரன்னை அடிச்சு அவுட்டாயி போறாரு. இப்போ ஷேவாக்கும் கங்கூலியும் ஆடறாங்க.

கங்கூலி : என்ன ஷேவாக், இன்னைக்கு எவ்வளவு அடிக்கறதா உத்தேசம்?
ஷேவாக்: நிச்சயமா இன்னைக்கும் செஞ்சுரி அடிச்சிடாலம்னு தோனுது.
கங்கூலி : இவனுங்களை என்ன அந்த பெர்முடா தலையனுங்கனு நினனச்சியா 114 அடிக்கறதுக்கு. நேத்து அடிச்சதை விட ஒரு ரன் கம்மியா அடிப்பனு தோனுது.
ஷேவக் : என்ன 113ஆ?
கங்கூலி : இல்லை 14.

10 ஓவர்ல இந்தியா 42 ரன் அடிச்சிருக்கு.
கங்கூலி : இந்த ரெண்டு பன்னாடைங்களும் போடறதை பார்த்தா அடிக்க முடியும்னு தோனலை. பேசாம இன்னும் 6 ஓவருக்கு டொக்கு வச்சிட்டு ஸ்பின்னர்ஸ் வந்தோன அடிக்கலாம்.
ஷேவாக் : போன ஓவர் வாஸ் போடும்போது கொஞ்சம் சோர்வா இருந்தான். அதனால் இந்த ஓவர்ல நீ அடிச்சு ஆடு, நான் அடுத்த ஓவரை பார்த்துக்கறேன். (மனசுக்குள்ளே "எப்படியும் இந்த நாயி அடிச்சு ஆடறேன்னு அவுட்டாயி போயிடும். அடுத்த கேப்டன் நாந்தான்" )

அவர் எதிர்பார்த்த மாதிரியே கங்கூலி அடிச்சு ஆட ட்ரை பண்ணி அவுட்டாயிடறாரு. ஸ்கோர்போர்ட்ல இருந்து கங்கூலி பேரை எடுத்துட்டு சச்சின் பேரை போடறதுக்குள்ள அவரும் அவுட்டாயி திரும்பராரு. அப்போ எதிர்ல உள்ள வர திராவிட்,

திராவிட் : ஏய் மூதேவி, அதான் ரெண்டு பாலை தொடாம விட்டில்ல.இந்த பாலையும் விடவேண்டியது தான?
சச்சின் : நானும் அப்படித்தான் நினைச்சேன். மூனாவது பால் ஆடுறப்ப பூஸ்ட் விளம்பரம் ஞாபகம் வந்துடுச்சு. அதுல ஆடர மாதிரி நினைச்சுகிட்டு பாலை தொட்டேன். அவுட்டாயிடுச்சு.அடுத்த மேட்சுல அடிக்கறேன்.
திராவிட் : அடுத்த மேட்ச் உன் பையனோட உங்க வீட்டு கிரவுண்ட்ல தான் ஆடப்போற. உன்னையெல்லாம் தலையில கட்டி என் கழுத்த அறுக்கறாங்க. அப்படி என்ன அவசரம் உனக்கு?
சச்சின் : பின்ன. போன மேட்சுல கொஞ்ச நேரம் நின்னு ஆடிட்டு போறதுக்குள்ள, ஃப்ரிட்ஜ்ல இருந்த பீரையெல்லாம் காலி பண்ணிடுச்சுங்க பரதேசிங்க. அதான் அவசரமா போறேன். ரேண்டு பீராவது தேத்தனும்ல.
திராவிட் ; ஓ இதுல இப்படி ஒன்னு இருக்கா. நீ சொல்றதும் சரிதான். அப்படியே எனக்கு ரெண்டு எடுத்து ஒளிச்சு வை.

திராவிடும், ஷேவாக்கும் எதிர்பார்த்ததை விட கொஞ்ச நேரம் தாக்கு பிடிச்சு ஆடறாங்க.ஸ்கோர் 20 ஓவர்ல 89 ரன்.

திராவிட் : ஆமா போன உலகக்கோப்பைல சிக்ஸா அடிச்ச,இப்ப என்ன ஆச்சு?
ஷேவாக்: அப்போ ஒவ்வொரு சிக்ஸ் அடிக்கரதுக்கு முன்னாலயும் எங்கம்மா ரிலையன்ஸ் ஃபோன்ல கூப்பிடுவாங்க. இந்த தடவை அவங்க ஃபோன்ல சார்ஜ் இல்லை. அதான்.
திராவிட் : த்த்த்தூதூ. இதெல்லாம் ஒரு பொழப்பு?
ஷேவாக் : (மனசுக்குள்ள என்னை பார்த்து துப்பிட்டியா? இந்த ஓவர்ல அவுட்டாயி உன்னை என்ன பண்றேன் பாரு)

ஷேவாக் அவுட்டாகி போறரு. திராவிட் அவரை கூப்பிட்டு,

திராவிட் : ஏண்டா அவன் தான் ஸ்லிப்ல ஒருத்தனை நிக்க வச்சிருக்கானே அப்புறம் ஏண்டா அவன்கிட்டயே தூக்கி குடுக்கறே.
ஷேவாக் : இல்லைண்ணே ஸ்லிப்ல நின்னு தூங்கிகிட்டு இருக்கான் அந்த பன்னாடை. என்னை டைவர்ட் பண்ற மாதிரி கொட்டாவி வேற விடுறான். அதான் அவனை அலர்ட்டா ஆக்கறதுக்கு கேட்ச் குடுத்தேன்.
திராவிட் : எல்லாரும் சொல்லி வச்சு எனக்கு குழி பறிக்கறீங்களா? போங்கடா நானே பார்த்துக்கறேன்.

அடுத்து வர யுவராஜும் தேவையில்லாம ரன் அவுட்டாயி போறாரு. அப்போ

திராவிட் : டேய் ப்ரில்கிரீம் மண்டையா, அதான் பால் நேரா ஃபீல்டர் கிட்ட போகுதே அப்புறம் ஏண்டா ஓடி வந்து ரன் அவுட்டான?
யுவராஜ் : இந்த பேச்சுக்கும் ஒன்னும் குறைச்சலில்லை. நான் தான் ஓடிவந்தேன்ல நீயும் வரவேண்டியது தான்?உனக்கு சுவருன்னு பேரு வெச்சதுக்கு குட்டிச்சுவருன்னு பேர் வச்சிருக்கலாம்
திராவிட் : நீ ஓடி வந்தது எங்கேடா தெரியுது. மண்டைல பூசியிருக்கர க்ரீம்ல க்ளேர் அடிச்சு கண்ணே தெரிய மாட்டேங்குது.

அடுத்து வர நட்சத்திர ஆட்டக்காரர் டோணி முதல் பால்ல அவுட்டாகி போறாரு. மகா கடுப்பான திராவிட் அவரை கூப்பிட்டு,

திராவிட் : டேய் சடையாண்டி, அவன் தான் ஸ்டம்புக்கு நேர பாலை போடறான்ல. கையில அவ்வளவு பெரிய பேட் வச்சிருக்கியே, அதால ஆடாம ஏண்டா காலை குறுக்கால விட்ட?
டோணி : இல்லன்னே, பேட்ட வைக்கலாம்னு தான் குனிஞ்சேன். அதுக்குள்ள முடி முன்னால் விழுந்து கண்ணை மறைச்சிடுச்சு
திராவிட் : போடி மாவு, ஏற்கனவே வீட்டு சுவத்தை எல்லாம் இடிச்சுட்டானுங்க. இனி உனக்கு சங்கு தான். முடிய வெட்டு முடிய வெட்டுனு எவ்வளவு தடவை சொன்னேன் கேட்டியாடா முள்ளம்பன்றி தலையா.
டோணி : கவலைப் படாதீங்கண்ணே, அதான் அகர்கர் இருக்கான்ல.
திராவிட் : யாரு அவனா? முப்பது யார்ட் சர்கிளுக்கு வெளியே அடிச்சா சிக்ஸ் இல்லைடா, பவுண்டரிக்கு வெளியே அடிக்கனும்னு எவ்வளவோ தடவை சொல்லிட்டேன். கேக்க மாட்டேங்கறான். அவனை வெச்சு உருப்பட்டாப்ல தான்.
டோணி : அப்புறம் ஏன்னே அவனை டீம்ல சேர்த்தீங்க?
திராவிட் : நான் எங்கேடா சேர்த்தேன். அந்த சச்சின் தான் அடம் பிடிக்கறான். ஒட்டடைக் குச்சிக்கு, துடைப்பகட்டை ரெகமண்டேஷன்.

அடுத்து வரும் அகர்கர் அதிசயமாக தாக்கு பிடித்து ஆறு ரன்கள் அடிச்சிருக்கார்.

திராவிட் : டேய் அதான் ஆறு ரன் அடிச்சு கலக்கிட்டியே, அப்புறம் ஏண்டா இப்படி பொனம் மாதிரி மூஞ்சிய வச்சிருக்க?
அகர்கர் : உங்க கிட்ட சொல்றதுக்கென்ன. நானே விழுந்து புரண்டு ஒரு ஃபிகரை செட் பண்ணி வச்சிருந்த்தேன், அது இப்போ நம்ம முனாஃபோட சுத்துது.
திராவிட் : ஏண்டா, அந்த ஃபிகர் கிட்டயே கேக்க வெண்டியது தான?
அகர்கர் : கேட்டேனே. என்னை விட முனாஃப் நல்லா போடறானாம். நிறைய விக்கெட் எடுக்கறானாம். அதான் என்னை கழட்டி விட்டுடுச்சு.
திராவிட் : நீயும் நல்லா போட்டு விக்கெட் எடுக்க வேண்டியது தான?
அகர்கர் : எண்ணன்னே என்னை பத்தி தெரிஞ்சு தான் பேசுறீங்களா? அதெல்லாம் நம்ம கையிலயா இருக்குது. என்னால முடிஞ்ச விஷ்யம்னா பண்ணலாம். விக்கெட் எடுக்கறதெல்லாம் நம்ம சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம்னே.

சிறிது நேரத்தில் அகர்கரும் அவுட்டாகிப் போக, திராவி தனியாளாக வீரத்துடன் போராடுகிறார் :). மலிங்கா வீசும் ஓவரில் நான்கு பவுண்டரி அடிச்சுட்டு சங்கக்கராவை பெருமையாக பார்க்கிறார்.

சங்கக்கரா ; அடிச்சதெல்லாம் ஓசி ஃபோரு. இது பார்க்கறதை பாரு. இதைத்தான் அணையப்போற விளக்கு பிரகாசம எரியுதுன்னு சொல்லுவாங்க. அடுத்த ஓவர்ல இருக்குதுடி உனக்கு ஆப்பு.

வழக்கம் போல் சைக்கிள் ஸ்டாண்டாக அனைத்து ஆட்டக்காரர்களும் அவுட்டாக, முனாஃபும், ஹர்பஜனும் கடைசி விக்கெட்டுக்கு ஆடுகிறார்கள்.

சங்கக்கரா : ஏண்டா பன் தலையா, அதான் எல்லாரும் அவுட்டாயி பொயிட்டாங்கள்ல, நீங்க மட்டும் எதுக்குடா துள்ளுறீங்க?
ஹர்பஜன் : எங்களையெல்லாம் யாரும் விளம்பறத்துல நடிக்க கூப்பிடறதில்லை. இப்படி எதாவது அடிச்சாலாவது கூப்பிடுவாங்கள்ல.அதான்.
சங்கக்கரா : நீங்க திருந்த மாட்டீங்களாடா? உங்களுக்காக சிகாகோல இருந்து சிறில்னு ஒருத்தர் ஃபேக்ஸ் அனுப்பியிருக்காரு.
ஹர்பஜன் : என்னவாம்?
சங்கக்கரா : போய் விவசாயத்தை பாருங்கடா!னு சொல்லியிருக்காரு.
ஹர்பஜன் : இது கூட நல்ல யோசனை தான். நாங்க விவசாயம் பண்ற அழகை பார்த்துட்டு சுகுனா பம்ப், ஸ்பிக் யூரியானு எதாவது விளம்பரத்துல நடிக்க கூப்பிடுவாங்களா?

சங்கக்கரா மயங்கி விழுகிறார்!!

போட்டி முடிந்தபின், சிவராமகிருஷ்ணன் திராவிடிடம் கேள்விகள் கேட்கிறார்.

சிவா: திராவிட், இன்னைக்கு தோத்ததை பத்தி என்ன சொல்ல விரும்பறீங்க?
திராவிட் : hmm..It's a disappointing day for us. Our bowlers didn't bowled well, batsmen didn't bat well and fielder's didn't field well.
சிவா: ஏண்டா, பவுலிங்கும் போடமாட்டிங்க, ரன்னும் அடிக்க மாட்டிங்க, விழுந்து ஃபீல்டிங்கும் பண்ண மாட்டிங்க! அப்புறம் என்ன ம....க்குடா கிளம்பி வந்தீங்க?
திராவிட் : ஹி.ஹி.. போன வருஷம் ஆட வந்தப்ப சில கரீபியன் தீவுகளை சுத்தி பார்க்க நேரமில்லாம போச்சு.அதுக்கு தான் சுத்தி பார்க்கலாம்னு கம்பைண்ட் ட்ரிப்பா இங்கே வந்தோம்.
சிவா : வந்தது தான் வந்தீங்க. 12 பேர் மட்டும் வந்திருக்கலாம்ல. எதுக்குடா சும்மா பெஞ்சுல உக்கார்ரதுக்கு பதான்,ஸ்ரீசாந்த், கார்த்திக் மூனு பேரையும் கூட்டிகிட்டு வந்தீங்க?
திராவிட் : ஆறு டிக்கெட் வாங்கினா ஒன்னு ஃப்ரீன்னு சொன்னாங்க. அதான் 12 டிக்கெட்டுக்கு 2 டிக்கெட் ஃப்ரீயா கிடைக்குதேன்னு கூட்டிகிட்டு வந்தோம்.
சிவா : அப்படி பார்த்தாலும் ஒரு டிக்கெட் செலவு தானடா?
திராவிட் : அது ஒன்னும் பெரிய விஷயமில்லை. இந்தியாக்கு போன உடனே அஞ்சால் அலுப்பு மருந்து விளம்பரத்துல நடிச்சு அந்த காசை சம்பாதிச்சுடலாம் :)

சிவராமகிருஷ்ணனும் சுருண்டு விழுகிறார் ! !

Thursday, March 22, 2007

நாளை நமதே !

ஒருவழியா கால்குலேட்டரை தூக்கிப் போட்டுட்டு, ஜெயிச்சா போதும் அடுத்த சுற்றுக்கு போயிடலாங்கற நிலைமைக்கு வந்திருக்கோம் இலங்கையோட புண்ணியத்தால. இலங்கை ஏற்கெனவே அடுத்த சுற்றுக்கு போயிட்டதால நாளைக்கு அவ்வளவு சீரியஸா விளையாடமாட்டாங்கன்னு சொல்லவும் முடியாது. ஏன்னா அவங்க நாளைக்கு தோத்தா, சூப்பர் 8க்கு 0 புள்ளிகளோட போகனும். இந்தியா 2 புள்ளிகளோட போகும். அடுத்த சுற்றுல இந்த 2 புள்ளிகள் ரொம்ப ரொம்ப முக்கியம். அதனால் இலங்கையும் நிச்சயமா ஜெயிக்கத்தான் பார்ப்பாங்க.

நாளைக்கு அணில உத்தப்பா இருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன். அவருக்கு பதிலா கார்த்திக் உள்ள வர வாய்ப்பிருக்கு. அதே மாதிரி அகர்கருக்கு பதிலா பதானை கொண்டு வந்தால் நல்லா இருக்கும். உத்தப்பாவுக்கு பதிலா பதானை கொண்டுவரவும் வாய்ப்பிருக்கு. அப்போ ஜாகிர்,முனாஃப்,பதான்,அகர்கர்,கும்ப்ளே/ஹர்பஜன்னு அஞ்சு பவுலர்கள் இருப்பாங்க. இந்தியா இந்த முடிவை எடுக்கவும் வாய்ப்புகள் அதிகம். ஏன்னா நாளைக்கு இலங்கை கிட்ட நாலு பவுலர்களையும், அஞ்சாவது 10 ஓவருக்கு ஷேவாக்,சச்சின்,யுவராஜ் எல்லாரையும் வச்சு ஒப்பெத்தறது ரொம்ப கஷ்டம். இருக்கற நாலு பவுலர்கள்ல யாராவது ஒருத்தர் சொதப்பினாலும் ரொம்ப சிக்கலாயிடும். அதனால அஞ்சு பவுலர்களோட போறது நல்லது. அப்போ பதானை சேர்த்துகிட்டா பேட்டிங்கும் கொஞ்சம் பலமாகும். உத்தப்பா 5 ரன் எடுத்து அவுட்டாகறத விட, பதான் 5 ரன் எடுத்து அவுட்டானாலும், பவுலிங்க்குக்கு உதவுவாரு. ஷேவாகே நான் ஆடமாட்டேன்னாலும் திராவிட் விடமாட்டாரு. போன போட்டில சதமடிச்சு நல்லா சிமெண்ட் போட்டு இடத்தை பிடிச்சிட்டாரு. அதனால கண்டிப்பா ஷேவாக் இருப்பார்.

ஜெய்வர்தனே டாஸ் ஜெயிச்சா கண்டிப்பா பவுலிங் தான் எடுப்பார். அதேசமயம் திராவிட் ஜெயிச்சால் பேட்டிங் எடுக்கனும்கறது என்னோட கருத்து. பிட்சுல ஸ்விங் இருக்கும், ஆடரது கஷ்டம்னாலும், முதல் பத்து ஓவரை தாக்கு பிடிச்சிட்டா கொஞ்சம் ஈஸி தான். நேத்து இலங்கை பங்களாதேஷ் கிட்ட பண்ண மாதிரி. முதல் பத்து ஓவர்ல 60,70 ரன் அடிக்கனும்னு அவசியமே இல்லை. ஒன்னு ரெண்டுன்னு ஸ்டைரைக்க ரொட்டேட் பண்ணாலே, ரன்னும் வரும் கான்ஃபிடன்ஸும் வரும். அதே சமயத்தில பவுலரையும் பதட்டப்படுத்தும். அஞ்சு பந்து டொக்கு வச்சிட்டு ஆறாவது பந்தை 4 அடிக்க போய் அவுட்டாகறதுக்கு பதில் ஸிங்கிள்,2ன்னு தட்டி தட்டி ஒரு ஓவருக்கு 4 ரன் எடுத்தா போதும். 10 ஓவருக்கு 40/0 இருக்கறது 10 ஓவருக்கு 60/3னு இருக்கறத விட நல்லது தான.

ஒருவேளை வியாழக்கிழமை இரவு மழை அதிகமா இருந்தா டாஸ் ஜெயிச்சதும் பவுலிங் பண்றதை பத்தி யோசிக்கலாம். இல்லைன்னா முதல்ல பேட்டிங் பண்றது தான் நல்லது. 250 ரன்ன சேஸ் பண்ணா கூட திடீர்னு ரெண்டு விக்கெட் விழுந்துட்டா ப்ரெஷர் அதிகமாயிடும், ரன்ரேட் கம்மியாயிடும். அப்புறம் அடிச்சு ஆட முயற்சி பண்ணி இன்னும் கஷ்டம். இந்தியா சேஸ் பண்ணி வின் பண்ணதேயில்லைனு சொல்லலை. இந்த மாதிரி வாழ்வா சாவான்னு இருக்கற சூழ்நிலைல முதல்ல பேட்டிங் பண்றது பாதுகாப்பானது.

அடுத்தது பேட்டிங் ஆர்டர். நாளைக்கு கொஞ்சம் ஃபெளெக்ஸிபிளான பேட்டிங் ஆர்டர் இருக்கறது நல்லது. கங்கூலியும் ஷேவாக்கும் தான் தொடங்குவாங்க. அதுல எந்த மாற்றமும் இருக்காதுன்னு நினைக்கிறேன். ஒருவேளை முதல் விக்கெட் 2,3 ஓவருக்குள்ள போயிடுச்சுன்னா, ஒன்டவுனா திராவிடை இறக்கலாம். மறுபடியும் ஒரு விக்கெட் போகாம அடுத்த ஆறு ஏழு ஒவருக்காவது ஆட வேண்டியது முக்கியம். அதே சமயம் ரன்ரேட்டையும் ஒரு நாலு ரன்லயாவது மெயின்டெய்ன் பண்ணனும். ஒருவேளை 10 ஓவருக்கு மேல முதல் விக்கெட் போய், ரன் ரேட் கொஞ்சம் கம்மியா இருந்தா அடிச்சு ஆடற யாரையாவது இறக்கி ரன்ரேட்டை உயர்த்த முயற்சி பண்ணனும். முக்கியமானது நடந்ததை நினைக்காம பயப்படாம ஆடறது தான். முன்னால ஒரு பதிவுல சொன்ன மாதிரி 'Play your natural game.Be committed to the game'. அதிரடியா அடிச்சு ஆடனும்னு இல்லை ஆனா ஸாலிட்டா ஆடனும். பவுலரை செட்டில் ஆக விடக்கூடாது. அந்த தப்பை தான் பங்களாதேஷ் கிட்ட பண்ணோம். ஒரேயடியா தடவாம, அடிக்கடி பீட்டன் ஆகாம், ஸாலிட்டா பந்தை அடிச்சாலே பவுலருக்கு ஏதாவது வித்தியாசமா பண்ணனும்னு தோனும். அப்போ நிறைய லூஸ் டெலிவரி கிடைக்க வாய்ப்பிருக்கு. நாளைக்கு Mental Game தான் பலன் கொடுக்கும்.

ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து ஆடி 100 அடிச்சு மறுமுனைல ஆடறவங்க ஆளுக்கு ஒரு முப்பது ரன் அடிச்சு அவருக்கு ஸ்டேண்ட் குடுத்தாலே போதும். நல்ல ஸ்கோர் அடிச்சிடலாம்.கங்கூலி போன ரெண்டு மேட்சுலயும் ஒருமுனைல நிலைச்சு நின்னு ஆடுனாலும், கொஞ்சம் வேகமா ரன் எடுக்கவும் முயற்சி பண்ணனுங்கறது என்னோட அபிப்ராயம். விக்கெட்ட காப்பத்த வேண்டியது முக்கியம்னாலும், ஒண்ணு ரெண்டுன்னு எடுத்து ரன்ரேட்டை பாதுகாக்கறதும் முக்கியம்.

பவுலிங்கும், ஃபீல்டிங்கும் சுமார் தான். இதை வச்சு இலங்கைய சமாளிக்கறது கஷ்டம் தான். நாளைக்கு அநேகமா கும்ப்ளேக்கு பதில் ஹர்பஜன் மறுபடியும் வருவாருன்னு நினக்கிரேன். இலங்கைல இடதுகை ஆட்டக்காரர்கள் நெறைய பேர் இருக்கறதால ஹர்பஜன்னுக்கு தான் வாய்ப்பு அதிகம். பார்ப்போம் திராவிடும் சாப்பலும் என்ன முடிவு பண்றாங்கன்னு. நாளைக்கு ஆடப்போற பிட்ச்ல இதுவரைக்கும் எந்த போட்டியும் நடக்கலை. இந்த பிட்சுல முதல்ல, ஸ்விங்கும் பவுண்சும் இருந்தாலும், அதுக்கப்புறம் ஆடறதுக்கு ஈஸியா இருக்கும்னு சொல்றாங்க. எல்லாத்தையும் கவனத்தில எடுத்துக்கனும். கண்டிப்பா அஞ்சு பவுலர்க்ளோட போறது தான் நல்லது.

நாளைக்கு இந்தியா ஜெயிச்சா, உடனே மேட்ச் ஃபிக்ஸிங்னு சொல்றதுக்கு நிறைய பேர் கிளம்பிடுவாங்க. அவங்களுக்கு எல்லாம் சொல்றது இதுதான். மேட்ச் ஃபிக்ஸிங் நடந்திருக்கு, இல்லைன்னு சொல்லலை. அதுக்காக இந்தியா தோத்தா உடனே காசு வாங்கிட்டாங்கன்னு சொல்றதும், ஜெயிச்சா காசு குடுத்து ஜெயிக்க வச்சாங்கன்னு சொல்லாதீங்க. சில மேட்சுல நடந்ததுக்காக எல்லா மேட்சையும் சந்தேகப்பட்டா, அப்புறம் க்ரிக்கெட்டோட சுவாரசியமே போயிடும். இந்தியா நாளைக்கு தோத்து வெளியேறினா, அதுக்காக இந்தியால எல்லாரும் பார்க்காம இருக்கப்போறதில்லை. கிரிகெட்ட ரசிக்கறவங்க இந்தியா ஆடுனாலும் ஆடாட்டியும் பார்ப்பாங்க. இந்தியா ஆடுனா த்ரில் அதிகம் அவ்வளவு தான். ஆக எல்லாத்தையும் மறந்துட்டு இந்தியா நாளைக்கு ஜெயிக்கனுங்கறதை மட்டும் நினைப்போம். கடவுள் சோதிச்சாலும் கைவிட மாட்டாரு :)

Monday, March 19, 2007

பாதிக் கிணறு தாண்டியாச்சு !



இன்னைக்கு பெர்முடாவை தோற்கடிச்சு பாதிக்கிணறு தாண்டி இருக்கு இந்தியா. ஆனா மீதி பாதியை தாண்டறது தான் கஷ்டமான விஷயம். அதையும் தாண்டலைன்னா வெளியேறவேண்டியது தான்.






பெர்முடாவுக்கு எதிரா 413 ரன் அடிச்சு உலகக்கோப்பையில சாதனை பண்ணியிருக்கு இந்தியா. இதுவரைக்கும் உலகக்கோப்பைல கென்யாவுக்கு எதிரா இலங்கை அடிச்ச 398 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோரா இருந்தது. இன்னைக்கு அதை முறியடிச்சுது இந்தியா. அதே மாதிரி ஒரு இன்னிங்ஸ்ல 18 ஸிக்ஸ் அடிச்ச தென்னாப்பிரிக்காவோட சாதனையையும் சமன் செஞ்சிருக்கு. அதே போல் 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைச்சிருக்கு. இதெல்லாம் பெர்முடாவுக்கு எதிராதான்னாலும், நம்ம அணியினருக்கு நல்ல கான்ஃபிடன்ஸ் தந்திருக்கும் இந்த வெற்றி.






ஷேவாக் இன்னைக்கு சதமடிச்சாலும், இலங்கையின் தரமான பந்து வீச்சுக்கு எதிரா தாக்குப்பிடிப்பாரான்னு தெரியலை. அதே மாதிரி இந்தியாவோட பவுலிங் மற்றும் ஃபீல்டிங் இன்னமும் முன்னேறனும். பெர்முடா கிட்டே ஒப்பேத்தின மாதிரி இலங்கை கிட்ட பண்ண முடியாது. என்னைக்கேட்டா அடுத்த போட்டில அகர்கருக்கு பதிலா பதானை கொண்டு வரலாம். மூனு விக்கெட் எடுத்திருந்தாலும் அவ்வளவு சிறப்பா அவர் பந்து வீசின மாதிரி தெரியலை. பதான் பேட்டிங்கும் கொஞ்சம் பண்ணுவாரு. அதனால் அடுத்த போட்டிக்கு என்னோட சாய்ஸ் பதான்.








சரி, இனி மீதி கினறு தாண்ட என்ன பண்ணனும்னு பார்க்கலாமா?



இன்று பெர்முடாவை 257 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சற்று ஆறுதல் தந்துள்ளது இந்தியா. இன்றைய நிலவரப்படி இலங்கையின் நெட் ரன்ரேட் 4.86, இந்தியா 2.5, பங்களாதேஷ் 0.14. மூன்று அணிகளும் 2 புள்ளிகள் பெற்றுள்ளன.

சாத்தியக்கூறு - 1
புதனன்று நடைபெறும் போட்டியில் இலங்கை பங்களாதேஷை வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளாகும். வெள்ளியன்று நடைபெறும் போட்டியில் இந்தியா இலங்கையை வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்த புள்ளிகள் நான்காகும். இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் பெர்முடாவை வெல்லும் பட்சத்தில் அதுவும் நான்கு புள்ளிகள் பெற்றிருக்க்கும். இந்நிலையில் மூன்று அணிகளும் 4 புள்ளிகளுடன் இருப்பதால் சிறந்த நெட் ரன்ரேட் உள்ள முதலிரு அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும். இதன்படி இந்தியா அடுத்த போட்டியில் வெல்வதுடன், சிறந்த ரன்ரேட் வித்தியாசத்திலும் வெல்ல வேண்டும். ஒருவேளை அடுத்த போட்டியில் இலங்கை 250 ரன்கள் அடித்து பங்களாதேஷை 200 ரன்களுக்கு அவுட்டாக்கினால், இலங்கையின் நெட்ரன்ரேட் 2.93 ஆக இருக்கும். இலங்கை 300 ரன்கள் அடித்து பங்களாதேஷ் 200 ரன்களுக்கு அவுட்டாக்கினால் 3.43 ஆக இருக்கும். இந்நிலையில் இந்தியா இலங்கையை குறைந்தது 100 ரன்கள் அல்லது 15 ஓவர்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் வெள்ளியன்றே அடுத்த சுற்றுக்கு செல்லலாம். இல்லையேல் ஞாயிறன்று நடைபெரும் பங்களாதேஷ்-பெர்முடா போட்டியின் முடிவு தெரியும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

சாத்தியக்கூறு - 2
புதனன்று நடைபெறும் போட்டியில் இலங்கையை பங்களாதேஷ் வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளாகும். இந்நிலையில் பங்களாதெஷ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி . இந்தியா இலங்கை இரு அணிகளும்
மோதும் போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும்.

சாத்தியக்கூறு - 3
இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டி வெற்றி தோல்வியின்றி முடியும் பட்சத்தில் இரு அணிகளும் ஒரு புள்ளி பெற்று மொத்தம் மூன்று புள்ளிகளாகும்.இந்நிலையில் இந்தியா இலங்கை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும்.

சாத்தியக்கூறு - 4
இலங்கை பங்களாதேஷையும் இந்தியாவையும் வெல்லும் பட்சத்தில், பங்களாதேஷ் பெர்முடாவிடம் தோற்றால், மீண்டும் நெட் ரன்ரேட் மூலம் இந்தியா அல்லது பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு செல்லும்.

இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.